Friday, February 16, 2007

"மாங்கா மன்னன்" நான்காம் மகேந்திரவர்மன்

1. "மன்னர் பயங்கர "மூட்-அவுட்"ல் இருக்கிறார்!"
"என்ன காரணம்?"

"அந்தப்புரத்தில் யாரோ ரகசிய கேமரா வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாம்!"


2. "மன்னருக்கு பயங்கர பணக்கஷ்டம்"

"அதற்காக "கொக்ககோலா" விளம்பரப்படத்தில் குத்தாட்டம் போட்டு நடித்திருப்பது டூ மச்!


3. "சபையில் இன்று ஏன் எல்லோரும் ஒருவித பதட்டத்தோடு அமர்ந்திருக்கிறார்கள்?"

"மன்னருக்கு "வீக் எண்ட்" சோமபான மப்பு இன்னமும் குறையவில்லையாம்! அவர் திடீரென "உவ்வே" பண்ண வாய்ப்பிருக்கிறதாம்!"

3 comments:

NSK said...

"Pallavas (Pahlavis Old Persian) were a South Indian dynasty. Pallavas established their capital at Kanchipuram in the 4th century CE. They grew wealthy and strong during the reign of Mahendravarman I (571 – 630 CE) and Narasimhavarman I (630 – 668 CE). They dominated the Telugu and northern parts of Tamil region till the end of the 9th century, for about six hundred years."

' புலிகேசி ' என்ற பெயரால், கர்நாடகம் கொப்பளித்தது....இப்போ மகேந்திரவர்மனால் ஆந்திரா என்னவாகப்போகிறதோ !

உங்கள் 'அரசர்' ஜோக்குகளுக்கு நல்ல reach இருக்கும் என்று நம்புகிறேன்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

இன்னமும் அரசர் காலத்து வஞ்சப்புகழ்ச்சி நடை உங்களிடம் மாறவில்லை!

வரலாற்று குறிப்பு உங்கள் தேடலின் வேகத்தைக் காட்டுகிறது. அருமை.

நான் இங்கு குறிப்பிட்டுள்ள நான்காம் மகேந்திரவர்மன் வேறு, நீங்கள் குறிப்பிட்டுள்ள மகேந்திரவர்மன் வேறு!

நான் குறிப்பிட்டுள்ள நபர் பெயர் மகேந்திரவர்மன். நேமாலஜிப்படி தனது பெயருக்கு முன்னால், மன்னன் என்ற பெயரை சேர்த்துக்கொண்டவர்! நியூமராலஜி பார்த்து தனது பெயருக்கு முன்பாக 4 என்ற எண்ணையும் சேர்த்துக்கொண்டவர்!

"மாங்கா" என்ற பட்டப்பெயர் மட்டும் நான் அவருக்கு கொடுத்தது! போதுமா விளக்கம்?!

NSK said...

நல்ல சமாளிப்பு !