Thursday, February 15, 2007

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் தனது மைனாரிட்டி நிலையை உணர்ந்து பல விஷயங்களை மிகவும் நேர்த்தியாக, சாதுர்யமாக கையாண்டு வருகிறது. பல்வேறு இலவச திட்டங்களுக்காக பணத்தை செலவழித்து வந்தாலும் நிதிநிலையை மறைமுகமாக சரிக்கட்டி வருகிறது. அதில் ஒன்று தான் தமிழக அரசின் போக்குவரத்துத்துறை. கடந்த சில ஆண்டுகளாக பேருந்து கட்டண உயர்வு இல்லாமல் இத்துறை செயல்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பற்றாக்குறையை "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" என்ற விதத்தில் சரிக்கட்டுகிறது. ஆம், புதிதாக அறிமுகம் செய்துவைத்துள்ள பேருந்துகளை நினைத்து நாம் ஒருபக்கம் பெருமையாக நினைத்தாலும், இந்த பேருந்துகள் அனைத்துமே "மஞ்சள் பலகை", "பச்சை பலகை", "மஞ்சள் நிற சிறப்பு பேருந்து" "நீல நிற சிறப்பு பேருந்து" என்ற அதிக கட்டணம் வசூலிக்கும் வகையை சேர்ந்த பேருந்துகளாகவே இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்!

இந்நேரம் பழைய ஜெயலலிதாவாக இருந்தால் பல பக்கங்களுக்கு காட்டமான அறிக்கைகள் விட்டு பந்த் போராட்டம், ஆர்ப்பாட்டம் என இறங்கி இருப்பார். பாவம், விஜயகாந்த் வருகையால் "கால்குலேஷன்" போட்டுப்போட்டுப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறார்! விஜயகாந்தோ தனது மனைவி பெயரில் உள்ள மண்டபத்தை காப்பாற்றி தன் மனைவியிடம் நல்ல பெயர் எடுக்கும் போராட்டத்திலேயே குறியாக இருக்கிறார். இதுபோதாதா கலைஞருக்கு! மனிதர் மிகவும் தெம்பாக இருக்கிறார்!

மக்கள்தான் உடல் சொகுசாக சீட்டில் குந்தினாலும், மனதால் குமுறிக்கொண்டு பயணம் செல்கிறார்கள்!

No comments: