Tuesday, February 20, 2007

விஜய டி ராஜேந்தர் Vs நயந்தாரா Fun @ Fun only!

கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்செயலாக சன் டிவியில் அரட்டை அரங்கம் பார்க்க நேர்ந்தது. விசு இருந்தவரை தாய்குலத்தைக் கட்டிப்போட்டு கண்கலங்க வைத்துக்கொண்டிருந்த அந்நிகழ்ச்சியில், விசு கழன்றுகொண்ட பிறகு பெருத்த தொய்வு. சாலமன் பாப்பையாவினாலும் நிலைமையை சரிக்கட்டமுடியவில்லை போலும். திடீரென விஜய டி ராஜேந்தரை அங்கு இழுத்து விட்டார்கள்! (விஜய டி ராஜேந்தர் இப்போது எந்தப்பக்கம் என்று சரியாகக் கணித்துச் சொல்பவர்களுக்குப் பரிசு கொடுக்கலாம்!)

இவரும் அடுக்குமொழியில் பேசுவார் என அனைவரையும்போல ஆவலோடு எதிர்பார்த்து பார்த்துக்கொண்டு இருந்தால், சிறிது நேரத்தில் ஜீன்ஸ் பேன்ட்டினுள் பதுக்கிவைத்திருந்த மிக நீளமான கைக்குட்டையை எடுத்து கண்ணீரைத் துடைக்கத் தொடங்கி விட்டார்! விசுவுக்கு அக்மார்க் அண்ணன்!

இடையிடையே பக்திச் சொற்பொழிவு! இவரால் சன்டிவிக்கு வரப்போகுது அழிவு!

என் மனதில்பட்ட ஒரு சின்ன யோசனை:
தனக்கு சிம்பு தருகின்ற தொல்லைகளைப் பற்றி விஜய டி ராஜேந்தரின் அரட்டை அரங்கத்தில், நயந்தாரா கண்ணீர் விட்டுக் கதறிப்பேசி, விஜய டிஆரைரையும் அழவைத்து, அதற்குத் தீர்வு காணலாம் அல்லவா?

No comments: