Friday, October 17, 2008

கிறுக்கல்!

ஏபிசிடி எழுதத்தெரியாமல்
கிறுக்கியிருந்தது குழந்தை
எழுதிப் பார்த்தேன்...
என்னால் முடியவில்லை
அதுபோல கிறுக்க!

பேசாத வார்த்தைகள்...

உன்னிடம் பேசாத வார்த்தைகள்
மரித்துப்போன
என் கல்லறை தேசத்தில்
உனைப் பார்க்கும்போதெல்லாம்
உயிர்த்தெழுதல் நடக்கிறது...
உடனுக்குடன்
சிலுவையில் அறையப்படுகிறது!

ஹைகூ

வேலி மீது கோபமில்லை
கரட்டாண்டியை
காணும்வரை!

அமாவாசையன்று
பவுர்ணமியாக
வானம்!

மெல்லிது காமம்!

ஊடல் சாய்ந்து கூடலான பொழுதில்
தொடங்கிய என் தேடல்
இறுதிவரை முடியாது
ஓய்ந்தது உன் உடல் மீதே...
இன்னமும் நீ
சொல்லாமல்
கண்மூடி இருக்கிறாய்...
வெட்கத்தை இமைக்குள் ஒளித்தபடி!