Sunday, February 11, 2007

தேடல்

நீ
கை நீட்டிய திசையில்
தொலைதூரத்தில்
தொடுவானத்திலே
நீண்டு பரந்த மேகக்கூட்டம்;
ஏதோ ஒரு மேகச்சிதறலில்
உன் மனதில் பட்ட உருவத்தை
என் மனதில் பதிய வைக்க
நெடுநேரமாய் போராடுகிறாய்!
புரிந்தும் புரியாமல் நான்...
விடா முயற்சியில் நீ...
தேடல் இன்னமும் முடியாமல்...
என்னருகே நீயிருப்பதால்!

2 comments:

Unknown said...

/ஏதோ ஒரு மேகச்சிதறலில்
உன் மனதில் பட்ட உருவத்தை
என் மனதில் பதிய வைக்க
நெடுநேரமாய் போராடுகிறாய்!/

நீங்கள் யாரை நினைத்து எழுதினீர்களோ ;-)
இது எனக்கு பள்ளிக்கூடத்தில் படிக்கிற வயசில் நண்பர்களுக்குள் நடந்த நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தியது!!!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

எனக்கு இப்போதும் கூட மேகத்தை வேடிக்கை பார்க்கும் ஆர்வம் உண்டு. மேகத்தை குழைத்து வானத்தில் காற்று வரையும் ஓவியம் தானே அது?!