டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் எவ்வளவோ முயற்சித்தும் இலங்கை பிரச்சனையில் யாராலும் மூக்கை நுழைக்க முடியவில்லை! ஈழத்தமிழர்களை நாங்கள் பார்த்துக் கொள்(ல்)வோம்... அவர்கள் செத்தாலும் பிழைத்தாலும் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டது இந்திய வல்லரசு!
ஈராக்கினுள் நுழைந்த அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு சற்றும் குறையாமலும், உலக நாடுகளை தனது கைக்குள் போடும் விவேகத்திலும் சற்றும் அசராமலும் தான் நினைத்ததை சாதித்து முடித்துள்ளது இந்தியா! இந்த வல்லரசுத் தன்மையைத்தானே கடவுளுக்கு நிகராக இந்திய மீடியாவினால் தூக்கி நிறுத்தப்பட்ட அப்துல்கலாமும் எதிர்பார்த்தார்! இப்போது கண்டிப்பாக பூரித்துப் போயிருப்பார்!
இந்த நேரத்தில் அப்துல்கலாமை தேவையில்லாமல் சுட்டிக்காட்டவில்லை. இலங்கைப் பிரச்சனையை, தனது எழுத்து சரியான விதத்தில் வெளிக்கொணரவில்லை என்று வருத்தத்துடன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் எழுத்தாளர் அருந்ததிராய். தனது கட்சியின் தமிழர் விரோதப்போக்கு பிடிக்காமல் பதவியை உதறிவிட்டு இன்றுவரை ஈழத்தமிழனுக்காக தனியொருவனாகக் குரல் கொடுக்கிறார் தமிழருவி மணியன். எந்தவகையிலாவது ஈழத்தமிழனுக்கு விடிவு வராதா என்று திரையுலகிலிருந்து, யாரையும் எதிர்பார்க்காமல் சீமான் என்ற தனிமனிதன் போராடுகிறான். இவர்களுக்கு இருக்கும் அக்கறையில் சிறிதளவாவது, இலங்கைக்கு வெகு அருகில், ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த அப்துல்கலாமுக்கு இருக்க வேண்டுமென நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு? ஒரு வார்த்தை போதாதா ஒட்டுமொத்த இந்தியர்களையும் சரியான பாதையில் சிந்திக்க வைக்க? பஞ்சாபிகளுக்காக பிரதமர் குரல் கொடுக்கும்போது தமிழர்களுக்கு எதிரான மனிதநேயப் படுகொலையை கண்டிக்கும் பொறுப்பு அப்துல்கலாமுக்கு இல்லையா?
அட, தமிழர்கள் என்று கூட வேண்டாம். நமது அருகிலுள்ள நாட்டில் நடைபெறும் படுகொலைகளுக்கு இந்தியா ஆதரவாக இருப்பது சராசரி இந்தியர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், முப்படைகளையும் நிர்வகித்த ஒரு முன்னாள் ஜனாதிபதிக்குமா தெரியாமல் போகும்? ஒரு மனிதநேயத்துடனாவது இதை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டாமா? இவர் எதிர்பார்க்கும் வல்லரசு இதுவென்றால் அப்படி ஒரு வல்லரசுக் கனவு அமெரிக்காவோடு ஒழிந்து போகட்டும்!
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Thursday, May 28, 2009
Saturday, May 16, 2009
தேர்தல் முடிவுகள்- 2009 - ஒரு கண்ணோட்டம்
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஏதாவதொரு சிறப்பு சொல்லப்படும். அந்தவகையில் பார்த்தால், இந்த தேர்தல், ஈழம் உள்ளிட்ட அனைத்துலக தமிழர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் வாழ்நிலையின் துயர் துடைக்கும் வழிகோலாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்தும் இருந்தது. அந்த வகையில் பார்த்தால் பெருத்த ஏமாற்றம் மிஞ்சியதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.
மணிசங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் பெருந்தலைகள் உருண்டாலும் வைகோவின் தோல்விதான் இருதரப்பிலும் பெருத்த அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.அவரவர் நிலைப்பாட்டைப் பொறுத்து பெருத்த சோகமாகவோ, பெருத்த மகிழ்ச்சியாகவோ ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தலை தப்பியது இறுதிக்கட்ட திருப்பம்! நிழல் அரசியல்வாதியாகவே அனைவராலும் அறியப்பட்ட மு.க. அழகிரியின் பிரம்மாண்ட வெற்றி, பணநாயகத்தின் வெற்றி என்று மட்டும் சொல்லித் தட்டிக் கழித்துவிட இயலாது. தேர்தலுக்குக்காகத் தரப்படும் பணத்தையும் பொருட்டாக மதித்து வாக்கினை அளிக்கும் மனநிலைக்கு மாறி வருவதையும், வழக்கமாக உணவகங்களில் தரப்படும் "டிப்ஸ்" போல இப்பணம் மதிக்கப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்து, அதிரடி "ஒட்டு மாங்கனி" பாமாகாவின் தோல்வி குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டு சேர்வதும், பெரியண்ணன், அன்புச்சகோதரி எனப் புகழ்ந்து சில தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதுமாக அரசியல் செய்து, மத்திய அமைச்சர் பதவியை தனது மகனுக்கு வாங்கிக் கொடுத்து அழகு பார்த்த ராமதாஸுக்கு மக்கள் தந்த "சவுக்கடி"தான் இத்தேர்தல் முடிவு! தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியிருக்கும் பாமாகாவுக்கு, இனியாவது கூட்டணித் தலைவர்கள் அளந்து அளந்து தொகுதிகளை அளிப்பார்கள் என நம்பலாம்! தொகுதிப் பங்கீட்டில் அசிங்கப்படுத்தப்பட்ட வைகோவாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விட்டார்!
எம்ஜியாரின் இரட்டை இலை இனியும் அதிமுகவை கைதூக்கி விடுமா என்பது சந்தேகம்தான். தற்போதய திமுகவின் ஆட்சியில் பேருந்துக் கட்டண உயர்வு, மின்வெட்டு, காவிரி, ஒகெனக்கல் பிரச்சனை என எத்தனையோ பிரச்சனைகள் எழுந்தபோதும், எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவி ஜெயலலிதா, செயல்படாத தலைவர் போலவே அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டார். தேர்தலின்போது இரண்டு மாதம் அரசியல் பண்ணினால் மட்டும் போதுமென்று யாராவது "பத்திரிக்கை நண்பர்கள்" ஆலோசனை கொடுத்திருக்கலாம்! அதன்படியே செயல்பட்டு, அல்லல்பட்டு, இப்போது கூட்டணி பலத்தால் அடைந்திருக்க வேண்டிய பிரமாண்ட வெற்றியைக் கோட்டை விட்டு நிற்கிறார்! இப்படியே தொடர்ந்தால் கோட்டையையும் இவர் விடுவது நிச்சயம்! தேர்தலின்போது இவர் எழுப்பிய திடீர் ஈழ ஆதரவு கோசத்தை, தமிழுணர்வாளர்களைத் தவிர மற்ற எவரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் தொடர்ச்சியாக எழுதி வைத்து ஒப்பித்தும், கேள்வி கேட்டும் இவர் செய்த பிரச்சாரம் கேலியாகவே மக்களால் பார்க்கப்பட்டுள்ளது!
ஜெயலலிதாவிற்கு ஒரு கேள்வி: இனியும் இப்படியே மந்தமாக அரசியல் செய்வீர்களா?!
நம்ம விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார் உள்ளிட்ட அனைவருமே காங்கிரஸ் கூட்டணிக்கு தங்களால் இயன்ற அளவு "கைமாறு" செய்திருக்கிறார்கள். அதற்கு கைமாறாக தொடர்சியாக இவர்களின் படங்களை சன் தொலைக்காட்சி குழுமத்தில் கண்டு ரசிக்கலாம்! வைகோவின் தோல்விக்கும், கார்த்திக் பெற்ற வாக்குக்கும் நேரடித் தொடர்பே இருக்கிறது. மற்ற தொகுதிகளில் விஜயகாந்த்தின் பங்கு எவ்வளவென்று, அவர் கூட்டணி வைப்பதற்காக டெல்லியில் மன்றாடிய தெய்வத்திற்குத்தான் தெரியும்!
இவ்வளவையும் சொல்லியாச்சு, கலைஞரைப் பற்றியும் சொல்லாமல் விடலாமா? கடந்த பொதுத்தேர்தலில் இவர் எழுப்பிய நாளை நமதே! நாற்பதும் நமதே! என்ற கோஷம், தற்போது ஜெயலலிதாவாலும் காப்பியடிக்கும் அளவிற்கு பரபரப்பான கோஷமாக அமைந்து விட்டது. அப்போது திமுக பெற்ற பிரமாண்ட வெற்றி போலவே, இம்முறையும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றிருக்கிறது. திமுகவின் வெற்றியால் தேர்தலுக்குப் பின்னால் அதிமுகவும், பாமகவும் கூட்டணி மாறும் குளறுபடிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளுக்கு நிகராகத் தனது தனிப்பட்ட செல்வாக்கை, திமுக மேலும் உயர்த்தியுள்ளது. மாநிலத்திலும் மத்தியிலும் நிலையான ஆட்சிக்கு இனி பாதிப்பில்லை. இதோ, கில்லி மாதிரி கிளம்பி விட்டார் டெல்லிக்கு... விரும்பிய அமைச்சர் பதவியை பேசி வாங்கி வர. வாழ்த்துகள்! இந்த வேகத்தைத் தான் ஈழப் பிரச்சனையிலும் அனைவரும் எதிர்பார்ப்பது. தந்தி அனுப்பி விட்டு, இங்கேயே குந்தியிருந்தால் நினைத்த தொகுதியைப் பெற முடியாதென்பது, தந்திக்கு மதிப்பில்லை என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன?
மத்திய காங்கிரஸின் அசைக்க முடியாத வெற்றி, பாஜகாவையும், செம்படைத் தோழர்களையும் அதள பாதாளத்துக்கே தள்ளி விட்டது உண்மை! அத்வானியின் பிரதமர் கனவு, பகற்கனவாகி வருகிறது. இதோ, மோடி தயாராகி விட்டார், கனவு காண! கனவு காணுங்கள், தூங்காமல் கனவு காணுங்கள்! இனிவரும் தேர்தலில், கூட்டணித் தாவல் தடைச் சட்டம் கொண்டு வருவதும், வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்க விருப்பமில்லாதவர்களுக்கான பொத்தானும் மாறுதலாக மலர வேண்டும். காலம் மாறும்போது ஜனநாயகப் பாதையிலும் மறுமலர்ச்சி வேண்டாமா?
மணிசங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் பெருந்தலைகள் உருண்டாலும் வைகோவின் தோல்விதான் இருதரப்பிலும் பெருத்த அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.அவரவர் நிலைப்பாட்டைப் பொறுத்து பெருத்த சோகமாகவோ, பெருத்த மகிழ்ச்சியாகவோ ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தலை தப்பியது இறுதிக்கட்ட திருப்பம்! நிழல் அரசியல்வாதியாகவே அனைவராலும் அறியப்பட்ட மு.க. அழகிரியின் பிரம்மாண்ட வெற்றி, பணநாயகத்தின் வெற்றி என்று மட்டும் சொல்லித் தட்டிக் கழித்துவிட இயலாது. தேர்தலுக்குக்காகத் தரப்படும் பணத்தையும் பொருட்டாக மதித்து வாக்கினை அளிக்கும் மனநிலைக்கு மாறி வருவதையும், வழக்கமாக உணவகங்களில் தரப்படும் "டிப்ஸ்" போல இப்பணம் மதிக்கப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்து, அதிரடி "ஒட்டு மாங்கனி" பாமாகாவின் தோல்வி குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டு சேர்வதும், பெரியண்ணன், அன்புச்சகோதரி எனப் புகழ்ந்து சில தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதுமாக அரசியல் செய்து, மத்திய அமைச்சர் பதவியை தனது மகனுக்கு வாங்கிக் கொடுத்து அழகு பார்த்த ராமதாஸுக்கு மக்கள் தந்த "சவுக்கடி"தான் இத்தேர்தல் முடிவு! தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியிருக்கும் பாமாகாவுக்கு, இனியாவது கூட்டணித் தலைவர்கள் அளந்து அளந்து தொகுதிகளை அளிப்பார்கள் என நம்பலாம்! தொகுதிப் பங்கீட்டில் அசிங்கப்படுத்தப்பட்ட வைகோவாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விட்டார்!
எம்ஜியாரின் இரட்டை இலை இனியும் அதிமுகவை கைதூக்கி விடுமா என்பது சந்தேகம்தான். தற்போதய திமுகவின் ஆட்சியில் பேருந்துக் கட்டண உயர்வு, மின்வெட்டு, காவிரி, ஒகெனக்கல் பிரச்சனை என எத்தனையோ பிரச்சனைகள் எழுந்தபோதும், எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவி ஜெயலலிதா, செயல்படாத தலைவர் போலவே அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டார். தேர்தலின்போது இரண்டு மாதம் அரசியல் பண்ணினால் மட்டும் போதுமென்று யாராவது "பத்திரிக்கை நண்பர்கள்" ஆலோசனை கொடுத்திருக்கலாம்! அதன்படியே செயல்பட்டு, அல்லல்பட்டு, இப்போது கூட்டணி பலத்தால் அடைந்திருக்க வேண்டிய பிரமாண்ட வெற்றியைக் கோட்டை விட்டு நிற்கிறார்! இப்படியே தொடர்ந்தால் கோட்டையையும் இவர் விடுவது நிச்சயம்! தேர்தலின்போது இவர் எழுப்பிய திடீர் ஈழ ஆதரவு கோசத்தை, தமிழுணர்வாளர்களைத் தவிர மற்ற எவரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் தொடர்ச்சியாக எழுதி வைத்து ஒப்பித்தும், கேள்வி கேட்டும் இவர் செய்த பிரச்சாரம் கேலியாகவே மக்களால் பார்க்கப்பட்டுள்ளது!
ஜெயலலிதாவிற்கு ஒரு கேள்வி: இனியும் இப்படியே மந்தமாக அரசியல் செய்வீர்களா?!
நம்ம விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார் உள்ளிட்ட அனைவருமே காங்கிரஸ் கூட்டணிக்கு தங்களால் இயன்ற அளவு "கைமாறு" செய்திருக்கிறார்கள். அதற்கு கைமாறாக தொடர்சியாக இவர்களின் படங்களை சன் தொலைக்காட்சி குழுமத்தில் கண்டு ரசிக்கலாம்! வைகோவின் தோல்விக்கும், கார்த்திக் பெற்ற வாக்குக்கும் நேரடித் தொடர்பே இருக்கிறது. மற்ற தொகுதிகளில் விஜயகாந்த்தின் பங்கு எவ்வளவென்று, அவர் கூட்டணி வைப்பதற்காக டெல்லியில் மன்றாடிய தெய்வத்திற்குத்தான் தெரியும்!
இவ்வளவையும் சொல்லியாச்சு, கலைஞரைப் பற்றியும் சொல்லாமல் விடலாமா? கடந்த பொதுத்தேர்தலில் இவர் எழுப்பிய நாளை நமதே! நாற்பதும் நமதே! என்ற கோஷம், தற்போது ஜெயலலிதாவாலும் காப்பியடிக்கும் அளவிற்கு பரபரப்பான கோஷமாக அமைந்து விட்டது. அப்போது திமுக பெற்ற பிரமாண்ட வெற்றி போலவே, இம்முறையும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றிருக்கிறது. திமுகவின் வெற்றியால் தேர்தலுக்குப் பின்னால் அதிமுகவும், பாமகவும் கூட்டணி மாறும் குளறுபடிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளுக்கு நிகராகத் தனது தனிப்பட்ட செல்வாக்கை, திமுக மேலும் உயர்த்தியுள்ளது. மாநிலத்திலும் மத்தியிலும் நிலையான ஆட்சிக்கு இனி பாதிப்பில்லை. இதோ, கில்லி மாதிரி கிளம்பி விட்டார் டெல்லிக்கு... விரும்பிய அமைச்சர் பதவியை பேசி வாங்கி வர. வாழ்த்துகள்! இந்த வேகத்தைத் தான் ஈழப் பிரச்சனையிலும் அனைவரும் எதிர்பார்ப்பது. தந்தி அனுப்பி விட்டு, இங்கேயே குந்தியிருந்தால் நினைத்த தொகுதியைப் பெற முடியாதென்பது, தந்திக்கு மதிப்பில்லை என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன?
மத்திய காங்கிரஸின் அசைக்க முடியாத வெற்றி, பாஜகாவையும், செம்படைத் தோழர்களையும் அதள பாதாளத்துக்கே தள்ளி விட்டது உண்மை! அத்வானியின் பிரதமர் கனவு, பகற்கனவாகி வருகிறது. இதோ, மோடி தயாராகி விட்டார், கனவு காண! கனவு காணுங்கள், தூங்காமல் கனவு காணுங்கள்! இனிவரும் தேர்தலில், கூட்டணித் தாவல் தடைச் சட்டம் கொண்டு வருவதும், வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்க விருப்பமில்லாதவர்களுக்கான பொத்தானும் மாறுதலாக மலர வேண்டும். காலம் மாறும்போது ஜனநாயகப் பாதையிலும் மறுமலர்ச்சி வேண்டாமா?
Wednesday, May 6, 2009
திமுகவை விட்டுப் பிரிந்துவிட்ட திரு.மு.க!
எம்ஜியார் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த வேளையில் நடைபெற்ற தேர்தலின்பொது எம்ஜியார் மறைந்துவிட்டார் என்றும், எம்ஜியாரின் மரணத்தை மறைத்துவைத்து தேர்தலில் போட்டி போடுகிறார்கள் என்றும் எம்ஜியார் பற்றி வதந்தியை பரப்பி விட்டு அன்றைய காலகட்டத்தில் கருணாநிதி அரசியல் செய்தார். அந்தோ பரிதாபம்! இப்போது தான் நல்லநிலையில் இருந்தபோதும், தனக்கு நோவு வந்ததென தனக்குத்தானே கூறிக் கொண்டு மருத்துவமனைக்கட்டிலில் தொடர்ந்து இருந்தபடி பரிதாபத்தைச் சம்பாத்தித்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை.
ஏன் இந்த இழிநிலை?
தன்னை காலங்காலமாக தமிழினத்தலைவராக தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிய திமுக தொண்டர்களையே மனம் நொந்துபோகும்படியல்லவா காங்கிரசோடு இவர் பின்னிப் பிணைந்துள்ளார். தமிழ் உணர்வு, ஈழத்தமிழர் ஆதரவு என்பது ஒவ்வொரு திமுகவினருக்கும் இவரால் ஊட்டப்பட்ட உணர்வு என்றால் மிகையாகாது. ஆனால் அந்த உணர்விற்கே இவர் துரோகம் செய்வதை திமுகவினராலேயே தாங்கிக் கொள்ள முடியாத நிலை. ஆம், கருணாநிதியைப் போல அனைவராலும் உணர்வுகளை மழுங்கச் செய்ய இயலாதல்லா? அவருக்கும் ஒருகாலத்தில் உணர்வு இருந்தது. ஆனால் தற்போது அவரது குடும்பத்தினர் அக்மார்க் வியாபாரிகளாக மாறிவிட்ட சூழலில் உணர்வாவது, மண்ணாங்கட்டியாவது என்ற கருணாநிதியின் நிலையை அவரது ஒவ்வொரு நாடகமும் தோலுரித்துக் காட்டத் தொடங்கி விட்டது!
இப்போது, திமுகவின் ஆதரவாளராக அறியப்பட்ட சீமானே ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று வீதி வீதியாக பிரச்சாரம் செய்கிறார். இவர் ஜெயலலிதா ஆசியுடனும், பணத்துடனும் பிரச்சாரத்தில் இறங்கவில்லை. கம்பம் ராமகிருஷ்னன் போன்றவர்களை, ஜெகத்ரட்சகன் போன்றவர்களை சீமானோடு ஒப்பிடக்கூடாது. அவர்கள் கருணாநிதி பணம் கொட்டியதால் சேர்ந்தவர்கள்... சீமானோ, கருணாநிதியின் குணம் கெட்டதால் விலகியவர். இவரைப் போல பல திமுக தொண்டர்களும் மனதளவில் கருணாநிதியை விட்டு வெகுதூரம் விலகிச் சென்று விட்டார்கள் என்பது தான் இப்போதய நிலை.
எம்ஜியார் பிரிந்தபோது கருணாநநிதியின் அரசியல் பிடிக்காமல் எம்ஜியாரோடு ஒரு பெரும் பிரிவினர் எம்ஜியார் பக்கம் சேர்ந்தார்கள். அதன்பிறகு வைகோ பிரிந்தபோதும் ஓரளவு அந்த மாதிரி நிலை ஏற்பட்டது. இப்போது யாரும் கருணாநிதியை விட்டுப் பிரியவில்லை, இருந்தும் இப்போதும் பல திமுகவினர் கருணாநிதியை விட்டு விலகி ஜெயலலிதாவையோ, விஜயகாந்தையோ ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எதனால்???
ஆம்! கருணாநிதி இப்போது திமுகவைவிட்டு, திமுகவின் கொள்கையை விட்டுப் பிரிந்துவிட்டார்!
ஏன் இந்த இழிநிலை?
தன்னை காலங்காலமாக தமிழினத்தலைவராக தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிய திமுக தொண்டர்களையே மனம் நொந்துபோகும்படியல்லவா காங்கிரசோடு இவர் பின்னிப் பிணைந்துள்ளார். தமிழ் உணர்வு, ஈழத்தமிழர் ஆதரவு என்பது ஒவ்வொரு திமுகவினருக்கும் இவரால் ஊட்டப்பட்ட உணர்வு என்றால் மிகையாகாது. ஆனால் அந்த உணர்விற்கே இவர் துரோகம் செய்வதை திமுகவினராலேயே தாங்கிக் கொள்ள முடியாத நிலை. ஆம், கருணாநிதியைப் போல அனைவராலும் உணர்வுகளை மழுங்கச் செய்ய இயலாதல்லா? அவருக்கும் ஒருகாலத்தில் உணர்வு இருந்தது. ஆனால் தற்போது அவரது குடும்பத்தினர் அக்மார்க் வியாபாரிகளாக மாறிவிட்ட சூழலில் உணர்வாவது, மண்ணாங்கட்டியாவது என்ற கருணாநிதியின் நிலையை அவரது ஒவ்வொரு நாடகமும் தோலுரித்துக் காட்டத் தொடங்கி விட்டது!
இப்போது, திமுகவின் ஆதரவாளராக அறியப்பட்ட சீமானே ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று வீதி வீதியாக பிரச்சாரம் செய்கிறார். இவர் ஜெயலலிதா ஆசியுடனும், பணத்துடனும் பிரச்சாரத்தில் இறங்கவில்லை. கம்பம் ராமகிருஷ்னன் போன்றவர்களை, ஜெகத்ரட்சகன் போன்றவர்களை சீமானோடு ஒப்பிடக்கூடாது. அவர்கள் கருணாநிதி பணம் கொட்டியதால் சேர்ந்தவர்கள்... சீமானோ, கருணாநிதியின் குணம் கெட்டதால் விலகியவர். இவரைப் போல பல திமுக தொண்டர்களும் மனதளவில் கருணாநிதியை விட்டு வெகுதூரம் விலகிச் சென்று விட்டார்கள் என்பது தான் இப்போதய நிலை.
எம்ஜியார் பிரிந்தபோது கருணாநநிதியின் அரசியல் பிடிக்காமல் எம்ஜியாரோடு ஒரு பெரும் பிரிவினர் எம்ஜியார் பக்கம் சேர்ந்தார்கள். அதன்பிறகு வைகோ பிரிந்தபோதும் ஓரளவு அந்த மாதிரி நிலை ஏற்பட்டது. இப்போது யாரும் கருணாநிதியை விட்டுப் பிரியவில்லை, இருந்தும் இப்போதும் பல திமுகவினர் கருணாநிதியை விட்டு விலகி ஜெயலலிதாவையோ, விஜயகாந்தையோ ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எதனால்???
ஆம்! கருணாநிதி இப்போது திமுகவைவிட்டு, திமுகவின் கொள்கையை விட்டுப் பிரிந்துவிட்டார்!
Monday, April 27, 2009
இப்படியும் உண்ணாவிரதம்!
கருணாநிதியின் 7 மணி நேர உண்ணாவிரதம் பற்றி அவருக்கு மிகவும் பிடித்த வடிவேலு பாணியில் சொல்வதானால், ஸ்டார்ட்டிங்கு நல்லாதான் இருந்துச்சு, பினிஷிங்கு சரியில்லயேப்பா! மிகக் குறுகிய நேர உண்ணாவிரதம் என்றவகையில் கின்னஸ் சாதனை படைத்திருகும் இந்த உண்ணாவிரதத்தின் அவசர அவசியம்தான் என்ன?.
ஜெயலலிதா, தனி ஈழம் அமைவதை ஆதரித்தது கருணாநிதிக்கு உண்மையில் பயங்கர அதிர்ச்சி வைத்தியமாகத்தான் இருந்திருக்கும்! இதைவிட ஒருபடி அதிகமாக என்ன அரசியல் ஸ்டண்ட் அடிப்பது என்று இரவு முழுக்க தூங்காமல் யோசித்திருப்பார்! "நான் இரவு முழுவதும் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசின் அறிவிப்பு வருமென்று எதிர்பார்த்து விழித்திருந்தேன் என்பதில், விழித்திருந்ததற்கான காரணம் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை!
அதுபோகட்டும்... கருணாநிதியின் உண்ணாவிரதம் நம்முள் பல்வேறு கேள்விகளை எழுப்புவதை தவிர்க்க இயலாது. அவற்றை கீழே தந்துள்ளேன்.
1. கருணாநிதியின் வீட்டினருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட உண்ணாவிரத முடிவு, கடந்த ஜூனியர் விகடன் இதழில் அப்படியே கவர் ஸ்டோரியாக வந்திருந்தது எப்படி?
2. திடீரென நினைத்த இடத்தில் உண்ணாவிரதம் இருப்பவர், இதே இலங்கைப் பிரச்சனைக்காக தொடர் உண்ணாவிரதமிருந்த தாய்மார்களை, நாயினும் கேவலமாக போராட்டத்திற்கு இடம்தேடி அலைய வைத்தது நியாயமா?
3. கருணாநிதி தந்தியனுப்பியும், தீர்மானம் போட்டும், கதறியழுதும் திரும்பிப் பார்க்காத மத்திய அரசு, இப்போது சுறுசுறுப்பாக பேச்சுவார்த்தை நடப்பதுபோல காட்டிக் கொள்வதும், அதற்கு இலங்கை இசைவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைவதும் பெரிய அரசியல் சதியை வெளிப்படுத்துகிறதே? அது என்னவென்றால், கிட்டத்தட்ட, பெரும்பான்மை ஈழப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தபிறகு, போர் நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்டு வரும் தருணத்தில், நீ அடிக்கிற மாதிரி அடி! நான் அழுவுற மாதிரி அழுவுரேன்! என்று கருணாநிதி, மத்திய அரசு, இலங்கை அரசு ஒரு கூட்டு நாடகத்தில் நடிப்பது போலவும், அதற்கும் நாமறிந்த வசனகர்த்தாவே இதனை இயக்கி இருப்பது போலவும் தெரிகிறதே?
4. மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் இலங்கை கேட்டு நடக்கும் என்பது உண்மையாகி விட்டது அல்லவா? இப்பொது எங்கே போனது இலங்கையின் இறையாண்மை?
5. கருணாநிதி நினைத்தால் மத்திய அரசை சில மணி நேரத்திற்குள்ளாகவே ஆட்டிவிக்க முடிகிறது. அப்படியானால் இத்தனை காலம், இவ்வளவு படுகொலைகள் நடந்து முடிவதற்காகத்தான் காத்திருந்தாரோ?
6. இப்போது, போர் நிறுத்தமெல்லாம் கிடயாது என்று இலங்கை அரசு மீண்டும் மறுத்திருக்கிறது. இனி, அடுத்ததாக யார், எங்கே உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்?
7. கருணா - கருணாநிதி; இருவருமே கிட்டத்தட்ட ஒன்றுதானா?
எப்படியோ, காங்கிரஸ் கூட்டணியின் அழிவுக்கு கருணாநிதியே தனது பங்கை தொடங்கி வைத்திருக்கிறார்! இன்னும் தொடரும்...
ஜெயலலிதா, தனி ஈழம் அமைவதை ஆதரித்தது கருணாநிதிக்கு உண்மையில் பயங்கர அதிர்ச்சி வைத்தியமாகத்தான் இருந்திருக்கும்! இதைவிட ஒருபடி அதிகமாக என்ன அரசியல் ஸ்டண்ட் அடிப்பது என்று இரவு முழுக்க தூங்காமல் யோசித்திருப்பார்! "நான் இரவு முழுவதும் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசின் அறிவிப்பு வருமென்று எதிர்பார்த்து விழித்திருந்தேன் என்பதில், விழித்திருந்ததற்கான காரணம் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை!
அதுபோகட்டும்... கருணாநிதியின் உண்ணாவிரதம் நம்முள் பல்வேறு கேள்விகளை எழுப்புவதை தவிர்க்க இயலாது. அவற்றை கீழே தந்துள்ளேன்.
1. கருணாநிதியின் வீட்டினருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட உண்ணாவிரத முடிவு, கடந்த ஜூனியர் விகடன் இதழில் அப்படியே கவர் ஸ்டோரியாக வந்திருந்தது எப்படி?
2. திடீரென நினைத்த இடத்தில் உண்ணாவிரதம் இருப்பவர், இதே இலங்கைப் பிரச்சனைக்காக தொடர் உண்ணாவிரதமிருந்த தாய்மார்களை, நாயினும் கேவலமாக போராட்டத்திற்கு இடம்தேடி அலைய வைத்தது நியாயமா?
3. கருணாநிதி தந்தியனுப்பியும், தீர்மானம் போட்டும், கதறியழுதும் திரும்பிப் பார்க்காத மத்திய அரசு, இப்போது சுறுசுறுப்பாக பேச்சுவார்த்தை நடப்பதுபோல காட்டிக் கொள்வதும், அதற்கு இலங்கை இசைவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைவதும் பெரிய அரசியல் சதியை வெளிப்படுத்துகிறதே? அது என்னவென்றால், கிட்டத்தட்ட, பெரும்பான்மை ஈழப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தபிறகு, போர் நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்டு வரும் தருணத்தில், நீ அடிக்கிற மாதிரி அடி! நான் அழுவுற மாதிரி அழுவுரேன்! என்று கருணாநிதி, மத்திய அரசு, இலங்கை அரசு ஒரு கூட்டு நாடகத்தில் நடிப்பது போலவும், அதற்கும் நாமறிந்த வசனகர்த்தாவே இதனை இயக்கி இருப்பது போலவும் தெரிகிறதே?
4. மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் இலங்கை கேட்டு நடக்கும் என்பது உண்மையாகி விட்டது அல்லவா? இப்பொது எங்கே போனது இலங்கையின் இறையாண்மை?
5. கருணாநிதி நினைத்தால் மத்திய அரசை சில மணி நேரத்திற்குள்ளாகவே ஆட்டிவிக்க முடிகிறது. அப்படியானால் இத்தனை காலம், இவ்வளவு படுகொலைகள் நடந்து முடிவதற்காகத்தான் காத்திருந்தாரோ?
6. இப்போது, போர் நிறுத்தமெல்லாம் கிடயாது என்று இலங்கை அரசு மீண்டும் மறுத்திருக்கிறது. இனி, அடுத்ததாக யார், எங்கே உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்?
7. கருணா - கருணாநிதி; இருவருமே கிட்டத்தட்ட ஒன்றுதானா?
எப்படியோ, காங்கிரஸ் கூட்டணியின் அழிவுக்கு கருணாநிதியே தனது பங்கை தொடங்கி வைத்திருக்கிறார்! இன்னும் தொடரும்...
Labels:
அரசியல்,
ஈழம்,
உண்ணாவிரதம்,
நையாண்டி,
விமர்சனம்
Saturday, April 25, 2009
கூஜ பக்க்ஷே Vs கேனன் & கோ

இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த அனுப்பபட்ட சிறப்பு தூதுவர்கள் என்று "கவிதை சுனாமி" வருணாநிதியால் பாராட்டப்பட்ட சிறப்பு தூதுக்கிளிகள் “கேனனும், சாராயணனும்” "அகிம்சைப் பேரொளி" கூஜ பக்ஷேவுடன் அப்படி என்னதான் பேசி இருப்பார்கள்? இதோ அங்கு நடந்த உரையாடலை என்னுடய "ரா!ரா! சரசக்கு ரா!ரா!" அமைப்பு துப்பறிந்து அப்படியே வழங்குகிறது!
கூஜ பக்க்ஷே: என்ன இது திடீர்னு இந்தப்பக்கம்? வாக்கிங் போறப்ப வழிதவறி வந்துட்டிங்களா?
கேனன் & கோ: (தலையைச் சொறிந்தபடி) வழியெல்லாம் தவறல... நம்ம தன்மோகன்கிங்குதான் சும்மா உங்கல பார்த்து வரச்சொன்னாரு...
கூஜ பக்க்ஷே: அந்தாளுக்கு வேற வேலயே கிடயாதா? ஹார்ட் ஆபரேசன் பண்ணியிருக்காறேன்னு பார்க்கறேன்.. இல்லைன்னா அசிங்க அசிங்கமா திட்டிடுவேன்!
கேனன் & கோ: ஏன் எங்க மேல எறிஞ்சு விழுறீங்க? நாங்கதான் உங்களுக்கு இன்னைக்குவரைக்கும் ஹெல்ப் பண்ணிட்டு இருக்கோம்கறத மறந்துடாதிங்க!
கூஜ பக்க்ஷே: நீங்க என்கிட்ட இப்ப சொல்றத மட்டும் இன்னும் கொஞ்சம் சத்தமா சொன்னீங்க, தமிழ்நாட்டுக்கே தெரிஞ்சிடும்! அப்புறம் தேர்தல்ல நீங்க நாமம்தான் போட்டுக்கணும்!
கேனன் & கோ: அதுவிஷயமாத்தான் உங்களைப் பார்க்க வந்தோம்..
கூஜ பக்க்ஷே: அது விசயமாவா? எந்தமாதிரி நாமம் போடுறதுன்னா?
கேனன் & கோ: அதில்லைங்க, தமிழ்நாட்டு தேர்தல்ல ஜெயிக்கிறது விசயமா...
கூஜ பக்க்ஷே: யோவ், அதுக்குத்தான் அங்கயும் ஒரு வருணாவை வச்சிருக்கோம்ல? எதிர்க்கட்சிகளை ஒண்ணுசேர விடாம போராட்டத்தை அமுக்குறதுதான அவருக்கு நாம குடுத்த அசைன்மென்ட்டு? சரியா பண்ண மாட்டிங்கிறாரோ?
கேனன் & கோ: அதெல்லாம் சரியாத்தான் நடக்குது... "தமிழ்நாட்டு புலி" “குருமா”வையே புல்லைத் திங்க வச்சுட்டார்னா பாருங்களேன்!
கூஜ பக்க்ஷே: பின்ன என்னைய்யா பிரச்சனை?
கேனன் & கோ:அரசியல்கட்சிகளை அடக்கியாச்சி... ஆனா, இன்னொருபக்கம் கொஞ்சம் பொம்பளைங்க ஒண்ணு சேர்ந்துக்கிட்டு சாகும்வரை உண்ணாவிரதம்னு சொல்லிட்டு பிரச்சனையை கிளறிவிடுறாங்க... அந்தப்பக்கம் சாரதிராஜான்னு ஒரு டைரக்டர், "என் இனிய தமிழ் மக்களே"ன்னு கெளம்பிட்டாரு!
கூஜ பக்க்ஷே: என்னய்யா பண்றாரு வருணாநிதி? சாரதிராஜாவையும் தூக்கி உள்ளபோட வேண்டியதுதான? எங்க நாட்டுல உள்ள போட மாட்டோம்.. மொத்தமா போட்டுத்தள்ளிடுவோம்!
கேனன் & கோ: அதான் "அசந்த"க்கு என்ன நடந்ததுன்னு தெரியுமே! அதிருக்கட்டும்... நீங்களும் கொஞ்சம் எங்களுக்கு ஹெல்ப் பண்ணணுமே...(திரும்பவும் தலையைச் சொறிகிறார்கள்)
கூஜ பக்க்ஷே: (கேனனைப் பார்த்து) உன் தலைல என்ன இருக்குதுன்னு இந்த சொறி சொறியுற?
கேனன் & கோ: அதில்லைங்க, கொஞ்சனாளைக்கு போரை நிறுத்துற மாதிரி அறிக்கை விட்டிங்கன்னா, தேர்தல் முடிஞ்சதும் அன்னைக்கு நைட்டே மொத்தமா ஒரே குண்டுல அவனுங்கள போட்டுத்தள்ளிடலாம்...
கூஜ பக்க்ஷே: போர நிறுத்துறதா? அதான் சுத்தி வளைச்சாசுல்ல? திரபாகரன் ஒருத்தந்தான் பாக்கி... நாளைக்கே அவன் கதையும் க்ளோஸ்!
கேனன் & கோ: என்ன இது? பத்திரிக்கைக்காறங்களுக்கு பேட்டி குடுக்குற மாதிரியே எங்க கிட்டயே பொய் சொல்றீங்க? அதான் திரபாகரன் அங்க இருக்கானா இல்லையான்னே நமக்கு ஒரு மண்ணும் தெரியாது... சும்மானாலும் அதை பிடிச்சாச்சு, இதைப் பிடிச்சாச்சு, அவன் மாட்டிக்கிட்டான், இவன் மாட்டிக்கிட்டான்னு கதை விட்டுக்கிட்டிருக்கோம்...
கூஜ பக்க்ஷே: நாம சொல்றதத்தான் ஐநா சபைல இருந்து அத்தனை பேரும் நம்புறாங்கல்ல? பிறகென்ன?
கேனன் & கோ: அதுசரி, இருந்தாலும் ரெண்டு நாளுக்குள்ள ஒரு லட்சம் மக்களும் வெளியேறி வந்துட்டங்ககறத யாரும் நம்ப மாட்டாங்கலே? அப்படியே நம்பினாலும், அத்தனை பேரையும் எங்க தங்க வச்சிருக்கீங்கன்னு கேட்டா என்ன சொல்றது?
கூஜ பக்க்ஷே: (கடுப்புடன்) உன் வீட்டுல தங்க வச்சிருக்கேன்னு சொல்லு! யோவ்! நீங்க என்ன முடிவோட வந்திருக்கீங்கய்யா? என்னையே குழப்பிடுவீங்க போல!
கேனன் & கோ: அதில்லை நண்பா, ரெண்டுகட்ட தெர்தல் முடிஞ்சுடுச்சு, அடுத்து தமிழ்நாட்டுக்கும் தேர்தல் பிரச்சாரம் பண்ண “போனியா” வந்தாகணும். அவங்க வந்தாலும் 40தொகுதியில் ஜெயிக்க முடியாதுங்கறது வேற விசயம்... ஆனா கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது ஜெயிக்கணும் இல்லயா? அவங்க ஜெயிச்சுவந்தாதான வழக்கம்போல உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்? என்ன நான் சொல்றது?
கூஜ பக்க்ஷே: அதுசரி, அவங்க தமிழ்நாட்டுக்கு வர நான் என்ன பண்ணனும்? "அன்னை போனியாவே! வருக வருக!"னு போஸ்டர் அடிச்சு ஒட்டணுமா?
கேனன் & கோ: அடக்கடவுளே! அப்படி போஸ்டர் அடிக்கத்தான் ஏற்கனவே மாங்கிரசுக்குள்ளயே ஆயிரத்தெட்டு கோஷ்டி இருக்குதே! இதுல நீ வேறயா?! கொஞ்ச நாளைக்கு போரை நிறுத்தறோம்னு ஒரே ஒரு அறிக்கை மட்டும் விடு.. அது போதும் இப்போதைக்கு!
கூஜ பக்க்ஷே: என்னப்பா இது! உங்க இந்திய அரசியல்வாதிகளோட ஒரே அக்கப்போரா இருக்கு! இங்கபாரு, சொந்த நாட்டு மக்கள் மேலயே குண்டு போட்டு தினமும் ஆயிரக்கணக்குல கொன்னுக்கிட்டு இருக்கேன்... அத்தனை கட்சிக்காரங்களும் கம்முன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்காங்க... உங்க நாட்டுல என்னடான்னா, ஆளாளுக்கு அறிக்கை விடுறானுங்க! எங்களை மாதிரி அதிபர் ஆட்சிதான் உங்களுக்கும் லாயக்கு!
கேனன் & கோ: உங்க நாட்டுல அதிபர் ஆட்சி நடக்குது... எங்க நாட்டுல எங்களை மாதிரி அதிகாரிங்க ஆட்சி நடக்குது! அவ்வளவுதான் வித்தியாசம்! பிரதமரா இருந்தாலும் நான் சொல்ற யோசனயத்தான் கேட்டு நடக்கணும்!
கூஜ பக்க்ஷே: இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல, நீங்க சொல்றதுல்லாம் புரியுது. எதுக்கும் என் சகோதரர்ககிட்ட கலந்து பேசிட்டு நான் அறிக்கை விட முடியும்.
கேனன் & கோ: அப்போ சம்மதம்தான்னு எடுத்துக்கலாமா? அப்படியே போற வழியில வருணாநிதிகிட்ட சொல்லிட்டுப்போனா, அடுத்த நாள் காலைப் பேப்பருக்கு ஒரு கவிதை ரெடி பண்ணிடுவாரு! அப்படியே உங்களுக்கு "அகிம்சைப் பேரொளி" பட்டமும் குடுத்தாலும் குடுப்பாரு!
கூஜ பக்க்ஷே: அந்த பட்டத்தை அப்படியே காத்துல எங்க நாட்டுப் பக்கமா பறக்க விடுங்க புடிச்சுக்கறேன்!
(ஜோக்குக்கு சிரித்தபடி கைகுலுக்கி விடை பெறுகிறார்கள்!)
விடைபெற்றபின்...
------------------
கூஜ பக்க்ஷே: இந்த கோமாளிகள் இப்படி எதாவது சொல்லிக்கிட்டேதான் இருப்பானுங்க... இறுதித் தமிழன் இருக்கும்வரை நம்மளோட படுகொலைப் பொழுதுபோக்கை நிறுத்தவே கூடாது!
Sunday, April 19, 2009
அரசியல் அதிரடிச் சிரிப்புகள்!
"இந்த தொகுதியில கள்ள ஓட்டு பதிவாகியிருக்கலாம்னு சந்தேகப்படுறாங்களாமே?"
"பின்ன, இங்க மட்டும் நூற்றிநாற்பது சதவீதம் வாக்கு பதிவாகி இருக்குதே!"
-----------------------------------------------------------------------------------
"செத்தவங்க ஓட்டெல்லாம் போடாதடான்னு என் பையன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்!"
"ஏன், போலீஸ்ல மாட்டிக்கிட்டானா?"
"இல்ல, பேய்ங்ககிட்ட மாட்டி, அறை வாங்கிட்டு பேச்சு மூச்சில்லாம படுத்திருக்கான்!"
-----------------------------------------------------------------------------------
"தலைவரோட தேர்தல் ஸ்டண்ட் அளவுக்கதிகமா போகுது!"
"எப்படி சொல்ற?"
"பிரச்சாரத்துக்குப் போற வழியில, தரையில படர்ந்திருந்த பூசணிக் கொடிக்காக தன்னோட பிரச்சார வேனையே நிறுத்திட்டு இன்னொரு வேன்ல கிளம்பிட்டாரே!"
-----------------------------------------------------------------------------------
"தலைவரோட பிரச்சாரம் சூடு பிடிச்சுடுச்சு!"
"எப்படி சொல்ற?"
"இப்பல்லாம் அடிக்கடி டாய்லெட் போறாரே!"
-----------------------------------------------------------------------------------
"எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியால் நமது கட்சிப் பொதுக்கூட்டங்களில் அதிக அளவு பிக்பாக்கெட் நடப்பதால், பேச்சைக் கவனிப்பதோடு பாக்கெட்டையும் கவனித்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ள்கிறேன்!"
"பின்ன, இங்க மட்டும் நூற்றிநாற்பது சதவீதம் வாக்கு பதிவாகி இருக்குதே!"
-----------------------------------------------------------------------------------
"செத்தவங்க ஓட்டெல்லாம் போடாதடான்னு என் பையன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்!"
"ஏன், போலீஸ்ல மாட்டிக்கிட்டானா?"
"இல்ல, பேய்ங்ககிட்ட மாட்டி, அறை வாங்கிட்டு பேச்சு மூச்சில்லாம படுத்திருக்கான்!"
-----------------------------------------------------------------------------------
"தலைவரோட தேர்தல் ஸ்டண்ட் அளவுக்கதிகமா போகுது!"
"எப்படி சொல்ற?"
"பிரச்சாரத்துக்குப் போற வழியில, தரையில படர்ந்திருந்த பூசணிக் கொடிக்காக தன்னோட பிரச்சார வேனையே நிறுத்திட்டு இன்னொரு வேன்ல கிளம்பிட்டாரே!"
-----------------------------------------------------------------------------------
"தலைவரோட பிரச்சாரம் சூடு பிடிச்சுடுச்சு!"
"எப்படி சொல்ற?"
"இப்பல்லாம் அடிக்கடி டாய்லெட் போறாரே!"
-----------------------------------------------------------------------------------
"எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியால் நமது கட்சிப் பொதுக்கூட்டங்களில் அதிக அளவு பிக்பாக்கெட் நடப்பதால், பேச்சைக் கவனிப்பதோடு பாக்கெட்டையும் கவனித்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ள்கிறேன்!"
Monday, April 13, 2009
குறி தப்பாத காலணிக் கவிதைகள்!
குப்பையில்
காலணிகளை வீசுங்கள்
குறி தப்பாமல்!
------------------------
குறி தப்பிய காலணியில்
புதைந்து கிடந்தது
வரலாற்று சோகம்!
------------------------
முடிவு கட்ட வேண்டாம்
இந்த
காலணி ஆதிக்கத்திற்கு!
------------------------
ராமாயணக் கதையில்
ஆட்சி செய்த காலணிகள்
புரட்சியில் இன்று!
------------------------
நசுக்க நசுக்க
புரட்சி வெடிக்குமாம்...
புரியவைத்தது காலணி!
------------------------
காலணிக்குத் தடை வந்தால்
எறிகணையாகுமோ
எழுதுகோல்கள்?
காலணிகளை வீசுங்கள்
குறி தப்பாமல்!
------------------------
குறி தப்பிய காலணியில்
புதைந்து கிடந்தது
வரலாற்று சோகம்!
------------------------
முடிவு கட்ட வேண்டாம்
இந்த
காலணி ஆதிக்கத்திற்கு!
------------------------
ராமாயணக் கதையில்
ஆட்சி செய்த காலணிகள்
புரட்சியில் இன்று!
------------------------
நசுக்க நசுக்க
புரட்சி வெடிக்குமாம்...
புரியவைத்தது காலணி!
------------------------
காலணிக்குத் தடை வந்தால்
எறிகணையாகுமோ
எழுதுகோல்கள்?
Thursday, March 26, 2009
தேர்தல் வந்திடுச்சு! - மூன்றாம் பாகம்!
கொத்துக் குண்டுகளால்
செத்து மடியுது
தமிழினம்...
முதுமையைச்
சொறிந்துவிட்டு
அறிக்கைமேல் அறிக்கையாய்
அனுதாபம் தேடுது
சாணக்கியத்தனம்!
---------------------------
அரசியலில்
தலையெடுப்பதற்காக
தலையெடுப்பதாக
மூன்றாந்தர அரசியலில்
நேருவின்
மூன்றாவது தலைமுறை!
எதையெதையோ இடிப்பவர்கள்
இடித்துக் கூறாமல்
குழப்பத்துடன்!
---------------------------
தமிழுணர்வாளர்கள்,
தேர்தலுக்காக
மரத்துக்கு மரம்
தாவியபடி...
சற்று
பொறுமை காக்கட்டும்
முத்துக்குமரன்கள் ஆவி!
---------------------------
காந்தி கடிகாரமும்
மூக்குக் கண்ணாடியும்
பேசிக்கொண்டன...
ஏலத்திலெடுக்கப்பட்ட
டோனிக்கும்கூட
இந்தியாவில்
பாதுகாப்பில்லையாமே!
---------------------------
சென்றமுறை
வெளிநாட்டு வீரர்களை
விலைக்குவாங்கிய ஐ.பி.எல்,
அடுத்தமுறை
தென்னாப்பிரிக்காவை
விலைக்கு வாங்கும்
அதே கிரிக்கெட்டுக்காக!
செத்து மடியுது
தமிழினம்...
முதுமையைச்
சொறிந்துவிட்டு
அறிக்கைமேல் அறிக்கையாய்
அனுதாபம் தேடுது
சாணக்கியத்தனம்!
---------------------------
அரசியலில்
தலையெடுப்பதற்காக
தலையெடுப்பதாக
மூன்றாந்தர அரசியலில்
நேருவின்
மூன்றாவது தலைமுறை!
எதையெதையோ இடிப்பவர்கள்
இடித்துக் கூறாமல்
குழப்பத்துடன்!
---------------------------
தமிழுணர்வாளர்கள்,
தேர்தலுக்காக
மரத்துக்கு மரம்
தாவியபடி...
சற்று
பொறுமை காக்கட்டும்
முத்துக்குமரன்கள் ஆவி!
---------------------------
காந்தி கடிகாரமும்
மூக்குக் கண்ணாடியும்
பேசிக்கொண்டன...
ஏலத்திலெடுக்கப்பட்ட
டோனிக்கும்கூட
இந்தியாவில்
பாதுகாப்பில்லையாமே!
---------------------------
சென்றமுறை
வெளிநாட்டு வீரர்களை
விலைக்குவாங்கிய ஐ.பி.எல்,
அடுத்தமுறை
தென்னாப்பிரிக்காவை
விலைக்கு வாங்கும்
அதே கிரிக்கெட்டுக்காக!
Wednesday, March 18, 2009
தேர்தல் வந்திடுச்சு! - இரண்டாம் பாகம்!
கூடி வாழ்ந்தால்
'கோடி" நன்மை
உண்மை உணர்ந்தவன்
அரசியல்வாதி!
உணராத ஜனமோ
அப்பாவி!
-----------------------------
கொள்கைச் சட்டையை
உரித்துப் போட்ட
நிர்வாணப் பாம்புகள்
இன்னமும் புற்றுக்குள்ளேயே...
பேச்சுவார்த்தை முடியாமல்!
-----------------------------
காத்து 'கருப்பு" பட்டதோ?
'கறுப்பு" எம்ஜியார்
தேய்ந்து
'கறுப்பு" ஆடாக
கசாப்புக் கடையில்!
'கோடி" நன்மை
உண்மை உணர்ந்தவன்
அரசியல்வாதி!
உணராத ஜனமோ
அப்பாவி!
-----------------------------
கொள்கைச் சட்டையை
உரித்துப் போட்ட
நிர்வாணப் பாம்புகள்
இன்னமும் புற்றுக்குள்ளேயே...
பேச்சுவார்த்தை முடியாமல்!
-----------------------------
காத்து 'கருப்பு" பட்டதோ?
'கறுப்பு" எம்ஜியார்
தேய்ந்து
'கறுப்பு" ஆடாக
கசாப்புக் கடையில்!
Sunday, March 15, 2009
தேர்தல் வந்திடுச்சு!
வெள்ளித்திரை விலக்கி
"பிரச்சார பீரங்கி" பவனி!
கையசைக்கிறார்...
புன்னகைக்கிறார்...
வியர்வை துடைக்கிறார்...
சூட்டிங் முடிந்ததும்
கூட்டம் கலைகிறது
"நல்ல கலருடா!"
கொள்கை பேசியபடி!
------------------------
ஈழப் பிரச்சனைக்காக
தெருவில் நின்று
போராடிய பட்டியல்
போகுமிடமெல்லாம்
பறையடிக்கப்படும்!
தானே தமிழனென்றும்
தானைத் தலைவனென்றும்
திரும்பத்திரும்ப
நினைவுபடுத்தப்படும்!
------------------------
தேர்தல் பிரச்சாரத்தில்
யாராவதொரு
"அடுத்த பிரதமர்"
"நன்றி வணக்கம்"
என்று தமிழில் பேச,
ஒரு வரி மட்டும் புரிந்ததில்
புல்லரித்துப் போகும்
கூட்டி வந்த கூட்டம்!
------------------------
தேர்தல் கமிஷனின்
கடுமையான விதிகள்...
கெடுபிடிகள்...
கட்டுப்பாடுகளையெல்லாம்
உடைத்தெறிந்துவிட்டு
எப்பாடுபட்டாவது
காப்பாற்றப்படுகிறது
இந்திய இறையாண்மை!
------------------------
சுவற்றில் இடம்பிடிக்க
போட்டா போட்டி!
யாருக்கும் நம்பிக்கையில்லை...
மக்கள்
மனதில் இடம்பிடிக்க!
------------------------
வரிசையாகப் பலரும்
தேடித்தேடி
பொத்தானை அழுத்தினாலும்
சரியான பொத்தான்
இன்றுவரை
யாருக்கும் அகப்படவேயில்லை!
------------------------
தேர்தலன்று
நாம் செய்யும் தவறு
சில நாட்களாவது உறுத்துகிறது
கரும்புள்ளியாக!
சிலர்
வெட்கமில்லாமல்
துடைத்தபடி...
மீண்டும் கரும்புள்ளி குத்த!
------------------------
காந்தி
மறைந்தும் வாழ்கிறார்...
மறைந்து மறைந்து
வாழ்கிறார்;
ஆரத்தித் தட்டிலும்
வாழை இலைக்கடியிலுமாக!
அர்த்தம் புரிகிறது
காந்தியின் புன்னகைக்கு!
"பிரச்சார பீரங்கி" பவனி!
கையசைக்கிறார்...
புன்னகைக்கிறார்...
வியர்வை துடைக்கிறார்...
சூட்டிங் முடிந்ததும்
கூட்டம் கலைகிறது
"நல்ல கலருடா!"
கொள்கை பேசியபடி!
------------------------
ஈழப் பிரச்சனைக்காக
தெருவில் நின்று
போராடிய பட்டியல்
போகுமிடமெல்லாம்
பறையடிக்கப்படும்!
தானே தமிழனென்றும்
தானைத் தலைவனென்றும்
திரும்பத்திரும்ப
நினைவுபடுத்தப்படும்!
------------------------
தேர்தல் பிரச்சாரத்தில்
யாராவதொரு
"அடுத்த பிரதமர்"
"நன்றி வணக்கம்"
என்று தமிழில் பேச,
ஒரு வரி மட்டும் புரிந்ததில்
புல்லரித்துப் போகும்
கூட்டி வந்த கூட்டம்!
------------------------
தேர்தல் கமிஷனின்
கடுமையான விதிகள்...
கெடுபிடிகள்...
கட்டுப்பாடுகளையெல்லாம்
உடைத்தெறிந்துவிட்டு
எப்பாடுபட்டாவது
காப்பாற்றப்படுகிறது
இந்திய இறையாண்மை!
------------------------
சுவற்றில் இடம்பிடிக்க
போட்டா போட்டி!
யாருக்கும் நம்பிக்கையில்லை...
மக்கள்
மனதில் இடம்பிடிக்க!
------------------------
வரிசையாகப் பலரும்
தேடித்தேடி
பொத்தானை அழுத்தினாலும்
சரியான பொத்தான்
இன்றுவரை
யாருக்கும் அகப்படவேயில்லை!
------------------------
தேர்தலன்று
நாம் செய்யும் தவறு
சில நாட்களாவது உறுத்துகிறது
கரும்புள்ளியாக!
சிலர்
வெட்கமில்லாமல்
துடைத்தபடி...
மீண்டும் கரும்புள்ளி குத்த!
------------------------
காந்தி
மறைந்தும் வாழ்கிறார்...
மறைந்து மறைந்து
வாழ்கிறார்;
ஆரத்தித் தட்டிலும்
வாழை இலைக்கடியிலுமாக!
அர்த்தம் புரிகிறது
காந்தியின் புன்னகைக்கு!
Labels:
அரசியல்,
ஈழப் பிரச்சனை,
கவிதை,
காந்தி,
தேர்தல்
Wednesday, March 11, 2009
கூட்டணி கூத்துக்கள்!
"எங்களுக்குள்ள 'கெமிஸ்ட்ரி' ஒர்க்அவுட் ஆனதால கூட்டணிக்கு ஒத்துக்கிட்டேன்னு தலைவர் சொல்றாரே, அதென்ன கெமிஸ்ட்ரி?"
"ஒத்துக்கலைன்னா 'ஆசிட்' ஊத்திடுவோம்னு அவங்க மிரட்டினதத்தான் சொல்றாரு!"
------------------------------------------------------
"அதென்ன கூட்டணி ஜோசியர்?"
"கிரக ராசிப்படி கூட்டணியில எத்தனை கட்சிகள் இருக்கணும், எத்தனை சீட்டு கொடுக்கணும், எந்தெந்த சீட் கொடுக்கணும், கூட்டணிக்கு என்ன பெயர் வைக்கணும்னு எல்லாத்தியும் புட்டுபுட்டு வைப்பாராம்!"
------------------------------------------------------
"கூட்டணி அமைக்கமாட்டேன்னு சொன்ன நம்ம தலைவரை குண்டர் சட்டத்துல கைது பண்ணிட்டாங்களாமே?"
பின்ன? இந்திய இறையாண்மைக்கு எதிரா செயல்பட்டா சும்மா விட்டுடுவாங்களா?!!"
"இவரு கூட்டணி அமைக்கிறதுக்காகவே கட்சி ஆரம்பிச்சிருக்காருன்னு எப்படி சொல்ற?
கட்சியோட பெயரே 'கூட்டணி முன்னேற்றக் கழகம்"னு தான வச்சிருக்காரு!"
------------------------------------------------------
"எதிர்கட்சித் தலைவர், செல்போன்ல ரொம்ப நேரமா உங்ககிட்ட எதுக்காகவோ கெஞ்சிக்கிட்டிருந்தாரே, ஏன்?"
"இருக்கிற எல்லாக் கட்சிகளையும் நாமளே விலைபேசிட்டதால அவரு மட்டும் தனியா போட்டியிட வெட்கமா இருக்குதாம்... வேணும்னா ஃப்ரியாவே அவரும் நம்ம கூட்டணியிலேயே சேர்ந்துக்கலாமான்னு கேக்குறாரு!"
------------------------------------------------------
"ஒத்துக்கலைன்னா 'ஆசிட்' ஊத்திடுவோம்னு அவங்க மிரட்டினதத்தான் சொல்றாரு!"
------------------------------------------------------
"அதென்ன கூட்டணி ஜோசியர்?"
"கிரக ராசிப்படி கூட்டணியில எத்தனை கட்சிகள் இருக்கணும், எத்தனை சீட்டு கொடுக்கணும், எந்தெந்த சீட் கொடுக்கணும், கூட்டணிக்கு என்ன பெயர் வைக்கணும்னு எல்லாத்தியும் புட்டுபுட்டு வைப்பாராம்!"
------------------------------------------------------
"கூட்டணி அமைக்கமாட்டேன்னு சொன்ன நம்ம தலைவரை குண்டர் சட்டத்துல கைது பண்ணிட்டாங்களாமே?"
பின்ன? இந்திய இறையாண்மைக்கு எதிரா செயல்பட்டா சும்மா விட்டுடுவாங்களா?!!"
"இவரு கூட்டணி அமைக்கிறதுக்காகவே கட்சி ஆரம்பிச்சிருக்காருன்னு எப்படி சொல்ற?
கட்சியோட பெயரே 'கூட்டணி முன்னேற்றக் கழகம்"னு தான வச்சிருக்காரு!"
------------------------------------------------------
"எதிர்கட்சித் தலைவர், செல்போன்ல ரொம்ப நேரமா உங்ககிட்ட எதுக்காகவோ கெஞ்சிக்கிட்டிருந்தாரே, ஏன்?"
"இருக்கிற எல்லாக் கட்சிகளையும் நாமளே விலைபேசிட்டதால அவரு மட்டும் தனியா போட்டியிட வெட்கமா இருக்குதாம்... வேணும்னா ஃப்ரியாவே அவரும் நம்ம கூட்டணியிலேயே சேர்ந்துக்கலாமான்னு கேக்குறாரு!"
------------------------------------------------------
Subscribe to:
Posts (Atom)