Monday, April 13, 2009

குறி தப்பாத காலணிக் கவிதைகள்!

குப்பையில்
காலணிகளை வீசுங்கள்
குறி தப்பாமல்!
------------------------

குறி தப்பிய காலணியில்
புதைந்து கிடந்தது
வரலாற்று சோகம்!
------------------------

முடிவு கட்ட வேண்டாம்
இந்த
காலணி ஆதிக்கத்திற்கு!
------------------------

ராமாயணக் கதையில்
ஆட்சி செய்த காலணிகள்
புரட்சியில் இன்று!
------------------------

நசுக்க நசுக்க
புரட்சி வெடிக்குமாம்...
புரியவைத்தது காலணி!
------------------------

காலணிக்குத் தடை வந்தால்
எறிகணையாகுமோ
எழுதுகோல்கள்?

No comments: