Wednesday, July 8, 2015

உன்னிடம் சிக்கிக்கொண்ட இரவுகள்
தொலைத்த தூக்கத்தை
தேடியபடியே விடிகின்றன

-----------------------
சுவரில் வரையப்பட்ட பூதத்தின் 
நீண்ட நாக்கில் 
பயமின்றி ஊர்கிறது பல்லி

----------------------
போக்குவரத்து நெருக்கடி நொடிகளில்
பீறிட்டுக் கிளம்பி
வழி கிடைத்ததும் வழிந்து ஓடிவிடுகிறது
சமுதாயச் சிந்தனை

No comments: