Monday, July 2, 2007

தீண்டாமை எனப்படுவது...

குருவாயூர் கோவிலுக்குள்
மதம் பிடித்த யானைகளுக்கு
அனுமதியுண்டு...
மதம் பிடிக்காத
மனிதர்களுக்கோ அனுமதியில்லை!


ஐயப்பன் கோவிலுக்குள்
கன்னிச் சாமிகளுக்கு
அனுமதியுண்டு...
கன்னிகள் சாமிகளாக
அனுமதியில்லை!


சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு
தமிழ்நாட்டில் இடமுண்டு...
கோவிலுக்குள் மட்டும்
தமிழுக்கு அனுமதியில்லை!


பள்ளியில் படித்த நினைவு;
தீண்டாமை
மனிதத்தன்மையற்ற செயல்...
உண்மைதான்
அது தெய்வீகச் செயல்!

4 comments:

நளாயினி said...

நிறைய சிந்திக்க வைத்த கவிதை.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

நன்றி.
உங்கள் சிந்தனையை தூண்டியதில் எனக்கு பெருமகிழ்ச்சி.
நான் எழுதிய இக்கவிதை இம்மாத "உண்மை" பத்திரிக்கையில் பிரசுரமாகியுள்ளது.

நளாயினி said...

oo! apadeja. vaalthukal.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

நன்றி. தங்களின் எழுத்தார்வமும் என்னை வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.