Monday, July 23, 2007

பொய்நிலவு

நிலவு
எனக்கு அறிமுகமான காலத்தில்
பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்!
இரவுகளில்
உண்ண மறுத்தபோது
எனக்கான உணவை
என்னோடு பகிர்ந்து சினேகமானது!
மொட்டை மாடியில்...
தூக்கம் தொலைந்த இரவுகளில்
நிலவோடு நான்
கண்ணாமூச்சி விளையாடியிருக்கிறேன்!
ராகுவும் கேதுவும்
விழுங்கிய நேரங்களில்
முழுதாகத் திரும்பும்வரை
கண் விழித்திருக்கிறேன்!
இன்றும்கூட
நிலவினைப் பார்க்கும்போதெல்லாம்
காதல் பிறக்கிறது...
உடன் கவிதையும் பிறக்கிறது!
உண்மை ஒருபுறம் இருக்கட்டும்...
பொய்நிலவு தான்
எனக்குப் பிடித்திருக்கிறது!

No comments: