Monday, October 10, 2011

வேண்டாம் இன்னொருமுறை!


அலைகளும் பலமுறை வந்து
ஏமாந்து திரும்பி விட்டன
... உனக்காகக் காத்திருந்த நிமிடங்களில்!

காணும் வரை இறுகிய முகம்
நீ நெருங்கவும் நொறுங்கியது
கடற்கரையில் மணலாய்!

சின்னச் சிணுங்களில்
சின்னாபின்னமாகி போனது
சேமித்து வைத்திருந்த கோபமெல்லாம்!

திட்டித் தீர்க்க வேண்டுமென்ற
திட்டமும் தவிடுபொடியானது
செல்லத் தீண்டலில்!

கொட்டிக் குவிக்க வைத்திருந்த
வர்த்தைகளெல்லாம்
முடிச்சே அவிழ்க்கப்படாமல்!

என் கோபமே
என்னைக் கேலி செய்கிறது
உன்னோடு சேர்ந்துகொண்டு!

இனியொரு முறை தவிக்க விடாதே
தோற்றே பழகிப்போன
வீராப்புகளை என்னோடு!
See more

4 comments:

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

விஜி said...

வீராப்புக்கள் தோற்பது
அவள் அன்பின் வெற்றியே...

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

ஆம்!