Tuesday, October 4, 2011

துளித் துளியாய் கவிதைகள்!

மெல்லத் தலை நகர்த்திப் பிறந்து
விழி திறவாமல் சிரித்து
தானே தவழ்ந்து எழுந்து
நடைபயிலும் குழந்தை
ஒவ்வொரு விடியலிலும்!
--------------------------

எதாவது குழந்தையின் வீட்டில்
ஒதுங்கியிருக்கும் நிலவு
மழை நேரத்தில்!
--------------------------

எந்நேரமும் மவுனம் உடைபடலாம்
சிறு தீண்டல் போதும்
காத்திருகும் கார்மேகங்கள்!
--------------------------

தோகை விரித்தாடும் மயில்
தேடிக் களைந்த வாடைக்காற்று
வீடு நுழையும் அந்தி!
--------------------------

அகிம்சை போர்த்தித் திரியும்
இம்சைகள்
காந்தியின் பெயராலே!

No comments: