Monday, October 10, 2011

பேருந்து நிமிடங்களில்...

திருவிழா அரங்க முகப்பில்
குலை தள்ளிய வாழைகளாக
வாயில்களில் தொங்கும் கூட்டம்!
---

டிக்கெட்டுக்காகக் கொடுத்தனுப்பும் பணம்
நல்வாய்ப்பாக ஆசிர்வதிக்கப்படும்
அழகிய பெண்ணின் கரத்தால்!
---

பறக்கவில்லை
ஊர்ந்துதான் செல்கிறது
சிக்னல்கள்தோறும் கவுண்ட் டவுன்!
---

வழிநெடுக ஒட்டப்பட்ட போஸ்டர்களும்
சிறுநீர் கழிக்காதே எச்சரிக்கையும்
திரும்பத் திரும்ப வாசிக்கப்படும்!
---

பயணச்சீட்ட்டு வங்கிய குற்றவாளிகளால்
தள்ளப்படும்
மா"நகரா"ப் பேருந்துகள்!
---

பக்கத்து இருக்கையில் அமர்ந்து
தூங்கிச் சரிபவரின்
கனவைக் கலைத்தபடி நான்!

4 comments:

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

அரவிந்த் குமார்.பா said...

அத்தனையும் முத்துக்கள்..!
(அண்ணே..அப்புறம் நாங்ககூட ரெங்கப்பநாயக்கர்பட்டிதான்..)

விஜி said...

அந்த நிமிடங்கள் பேருந்து பயனத்திலேயே முடியாமல் தொடர்ந்தால் சரி...

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

:)