Thursday, September 29, 2011

காதலுடன்...


பேனாவைக் கவிழ்த்தியதுமே
காகிதமெங்கும் கொட்டியது
உனக்கான என் மனது!

நீ வாசிப்பாயென்ற நப்பாசையில்

தானாகவே வந்து
கோர்த்துக் கொண்டன எழுத்துக்கள்
உனக்கான கவிதையில்!

உன் அழகை வர்ணித்து

எதுவும் எழுதவில்லை
இயல்பான அழகுக்கு
வர்ணனைப்பூச்சு தேவையில்லை!

உன் மீதான காதலை

இக்கவிதையில் சொல்லவில்லை
உன் பெருமையை
உன்னிடமேவா சொல்லிக்காட்டுவது?

இப்படித்தான்

குழம்பிப் போகிறேன்
என் சிந்தனையில் உன் முகம்
பட்டுத் தெறிக்கும்போதெல்லாம்!

நீ பிரித்துப் படித்தால்

மகிழ்வேன்!
நாமிருவரும் சேர்ந்து படித்தால்
இக்கவிதை மகிழும்!

5 comments:

முனைவென்றி நா சுரேஷ்குமார் said...

அருமை.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

விமர்சனத்திற்கு நன்றி!

Rathnavel Natarajan said...

நீ பிரித்துப் படித்தால்
மகிழ்வேன்!
நாமிருவரும் சேர்ந்து படித்தால்
இக்கவிதை மகிழும்!

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...
This comment has been removed by the author.