Thursday, September 8, 2011

உடைக்காத காதல்!

மனதுள் நீயே நிறைந்துவிட்டாய்
படிக்கட்டில் தொற்றியபடி
என் பயணம்!

எனக்காகத் துடித்த இதயம்
தடம் மாறித் துடிக்கிறது
சில நேரம் சிரிக்கிறது!

உன்னை விரும்பும் என்னை
உனக்கும் பிடிக்க வேண்டுமென்று
விரும்புகிறேன்!

எத்தனையோ பேரைப்போல
கடந்து செல்ல முடியவில்லை
வெறும் வழிப்போக்கனாய்!

உனக்கான என் காதல்
இன்னமும் பல்லிடைக் கடுகாக
சொல்லவும் முடியாமல்!

நம்பிக்கையோடு இருக்கிறேன்
முட்டை உடையாமலேயே
குஞ்சு பொறிக்குமென!

No comments: