Tuesday, September 6, 2011

இன்னமும் மடித்து வைக்கப்படாத
அந்த இறுதிக்கட்டத் தூக்கம்
அலாதியானது...
கனவறுந்து போன பொழுதுகளில்
பகற்பொழுதின் அவசரங்கள் வந்து
அப்பிக்கொள்ளக் காத்திருக்கையில்
செல்லக் குழந்தையென
தலையணையை மெல்ல அணைத்து
இருளுக்கும் புலர்வுக்குமிடைப்பட்ட
அதிகாலையைப் பிழிந்தெடுத்து
தன்னை மறக்க வைத்த உறக்கத்தை
விழிமூடி சிலநொடிகள் அனுபவித்து
விடியலில் வழியனுப்புகையில்
இன்னும் சில கணங்கள்  நீட்டிக்கும்படி
கோரிக்கை எழுப்பத் தோன்றும்
சிணுங்கிடும் கடிகாரம் பார்த்து!

No comments: