Thursday, September 29, 2011

பாடுபொருள் படும்பாடு!

பாடுபொருள் காதலாகிப் போனால்
சிக்கல் வந்துசேரும் கவிஞனுக்கு!
பாடப்படுபவள் யாரென்றறியும் ஆவல்
இயல்பாகவே எழுந்துவிடும் வாசிப்பவருக்கு!
எழுதும்போதெல்லாம் யோசித்ததில்லை
யோசிக்கிறேன் கேள்வியெழும்போதெல்லாம்!
எந்த உருவமும் சரியாகப் பிடிபடவில்லை
"அவங்க உங்க மனைவி தான?"
பொய்யுரைக்கத் தூண்டும் கேள்விகளும் அவ்வப்போது!
கவிஞன் ஊற்றெடுக்கும் தலைக்காவிரியாக
காதல் கவிதைகள் வழிந்தோடும் ஊரில்
மீசை அரும்புமுன் அரும்பிடுமே இந்த ஆசை!
நிஜத்தைக் காதலிக்கும் தைரியமற்று
கற்பனையில் காதலிக்கும் ஜாதியில் வளர்ந்து
கூடாமல் கூடிக் கலந்த காதலில்
கரு கூடாமல் போன சோகமும்,
கலைந்துபோன கர்ப்பத்தின் வலியும்,
குறைமாதக் குழந்தையின் பதைபதைப்பும்,
வழிமறக்கச் செய்த சுகப் பிரசவமுமாய்
அத்தனை அனுபவத்தையும் பிரசவித்தாலும்
காரணம் யாரென்றறியும் ஆர்வம் குறைவதில்லை!
காதலை உணர்த்தி, வரிகளில் வழிந்து,
கவிதையாய் நிறைந்து ஓடுபவளின் உருவம்
காண முடியாததை எப்படிச் சொல்வேன்?
தாகம் தணிக்கும் தண்ணீரின் உருவம்
இப்படித்தான் இருந்ததென்று!

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய கவிதை

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!

முனைவென்றி நா சுரேஷ்குமார் said...

அருமை.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!