Friday, September 28, 2007

மீண்டும் ஹைக்கூ!

சாலையோர ஓவியத்தில்
யேசுபிரான்...
சில்லரைகளையும் சேர்த்துச் சுமந்தபடி!

சிறுபுள்ளி கூட சிக்காததால்
செல்வி
தற்போதைக்கு "செலவி"யாக!

குழந்தை அழுதது...
அதட்டினார் அப்பா..
சமாதானம் பேசினான் பலூன்காரன்!

குழாயடிச் சண்டை
தயங்கியபடி
நல்ல தண்ணீர்!

அப்பா அம்மா சண்டை
கன்னம் வீங்கியது
எனக்கு!

2 comments:

kiddy ppl said...

//குழாயடிச் சண்டை
தயங்கியபடி
நல்ல தண்ணீர்!//

அழகான வாக்கியங்கள்!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

ரசிப்புக்கு நன்றி தமிழச்சி.