Wednesday, September 26, 2007

நறுக்! நறுக்!

கழைக்கூத்தாடி
உயரமான கம்பியில் தான்
அவள் நடக்கிறாள்...
தெருவே நெருக்கடியில்!

ஏ டி எம்
விடிய விடிய
தூக்கமில்லாமல்...
புதுப்பணக்காரன்!

கோடை காலம்
வழிநெடுக
வியர்த்துக்கொட்டியபடி...
தண்ணீர் லாரி!

கிளி ஜோசியம்
அள்ளிக் கொடுத்துக் கொடுத்துச்
சிவந்து போனது
கிளியின் மூக்கு!

கருவாடு
ஈரமில்லாததால்...
ஈரமில்லாததால்...
கருவாடாக இன்று!

No comments: