Wednesday, August 24, 2011

என்னை நனைத்த மழைத்துளிகள்

தேங்கிய நீரை
வாரியிறைத்தபடிதான்
வாகனங்கள் நகர்கின்றன
இருந்தும் குறைவதாயில்லை
மழைநீர்க் குட்டை!

சவ ஊர்வலம்போலதான்
போக்குவரத்து ஊர்ந்து செல்லும்
ஊர்வலத்தின் முன்னே
உண்மையிலேயே
செத்துக்கிடந்தாலும் கிடக்கும்
எதாவது அரசு பேருந்து!

தேரைகள், பாம்புகள், எல்லாமே
சொல்லாமல் கொள்ளாமல்
வந்து குடியேறும்
கண்ணுக்கு அகப்படாத மூலைகளில்...
வாடகை பயம் போல!


No comments: