Saturday, April 25, 2009

கூஜ பக்க்ஷே Vs கேனன் & கோ


இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த அனுப்பபட்ட சிறப்பு தூதுவர்கள் என்று "கவிதை சுனாமி" வருணாநிதியால் பாராட்டப்பட்ட சிறப்பு தூதுக்கிளிகள் “கேனனும், சாராயணனும்” "அகிம்சைப் பேரொளி" கூஜ பக்ஷேவுடன் அப்படி என்னதான் பேசி இருப்பார்கள்? இதோ அங்கு நடந்த உரையாடலை என்னுடய "ரா!ரா! சரசக்கு ரா!ரா!" அமைப்பு துப்பறிந்து அப்படியே வழங்குகிறது!

கூஜ பக்க்ஷே: என்ன இது திடீர்னு இந்தப்பக்கம்? வாக்கிங் போறப்ப வழிதவறி வந்துட்டிங்களா?

கேனன் & கோ: (தலையைச் சொறிந்தபடி) வழியெல்லாம் தவறல... நம்ம தன்மோகன்கிங்குதான் சும்மா உங்கல பார்த்து வரச்சொன்னாரு...

கூஜ பக்க்ஷே: அந்தாளுக்கு வேற வேலயே கிடயாதா? ஹார்ட் ஆபரேசன் பண்ணியிருக்காறேன்னு பார்க்கறேன்.. இல்லைன்னா அசிங்க அசிங்கமா திட்டிடுவேன்!

கேனன் & கோ: ஏன் எங்க மேல எறிஞ்சு விழுறீங்க? நாங்கதான் உங்களுக்கு இன்னைக்குவரைக்கும் ஹெல்ப் பண்ணிட்டு இருக்கோம்கறத மறந்துடாதிங்க!

கூஜ பக்க்ஷே: நீங்க என்கிட்ட இப்ப சொல்றத மட்டும் இன்னும் கொஞ்சம் சத்தமா சொன்னீங்க, தமிழ்நாட்டுக்கே தெரிஞ்சிடும்! அப்புறம் தேர்தல்ல நீங்க நாமம்தான் போட்டுக்கணும்!

கேனன் & கோ: அதுவிஷயமாத்தான் உங்களைப் பார்க்க வந்தோம்..

கூஜ பக்க்ஷே: அது விசயமாவா? எந்தமாதிரி நாமம் போடுறதுன்னா?

கேனன் & கோ: அதில்லைங்க, தமிழ்நாட்டு தேர்தல்ல ஜெயிக்கிறது விசயமா...

கூஜ பக்க்ஷே: யோவ், அதுக்குத்தான் அங்கயும் ஒரு வருணாவை வச்சிருக்கோம்ல? எதிர்க்கட்சிகளை ஒண்ணுசேர விடாம போராட்டத்தை அமுக்குறதுதான அவருக்கு நாம குடுத்த அசைன்மென்ட்டு? சரியா பண்ண மாட்டிங்கிறாரோ?

கேனன் & கோ: அதெல்லாம் சரியாத்தான் நடக்குது... "தமிழ்நாட்டு புலி" “குருமா”வையே புல்லைத் திங்க வச்சுட்டார்னா பாருங்களேன்!

கூஜ பக்க்ஷே: பின்ன என்னைய்யா பிரச்சனை?

கேனன் & கோ:அரசியல்கட்சிகளை அடக்கியாச்சி... ஆனா, இன்னொருபக்கம் கொஞ்சம் பொம்பளைங்க ஒண்ணு சேர்ந்துக்கிட்டு சாகும்வரை உண்ணாவிரதம்னு சொல்லிட்டு பிரச்சனையை கிளறிவிடுறாங்க... அந்தப்பக்கம் சாரதிராஜான்னு ஒரு டைரக்டர், "என் இனிய தமிழ் மக்களே"ன்னு கெளம்பிட்டாரு!

கூஜ பக்க்ஷே: என்னய்யா பண்றாரு வருணாநிதி? சாரதிராஜாவையும் தூக்கி உள்ளபோட வேண்டியதுதான? எங்க நாட்டுல உள்ள போட மாட்டோம்.. மொத்தமா போட்டுத்தள்ளிடுவோம்!

கேனன் & கோ: அதான் "அசந்த"க்கு என்ன நடந்ததுன்னு தெரியுமே! அதிருக்கட்டும்... நீங்களும் கொஞ்சம் எங்களுக்கு ஹெல்ப் பண்ணணுமே...(திரும்பவும் தலையைச் சொறிகிறார்கள்)

கூஜ பக்க்ஷே: (கேனனைப் பார்த்து) உன் தலைல என்ன இருக்குதுன்னு இந்த சொறி சொறியுற?

கேனன் & கோ: அதில்லைங்க, கொஞ்சனாளைக்கு போரை நிறுத்துற மாதிரி அறிக்கை விட்டிங்கன்னா, தேர்தல் முடிஞ்சதும் அன்னைக்கு நைட்டே மொத்தமா ஒரே குண்டுல அவனுங்கள போட்டுத்தள்ளிடலாம்...

கூஜ பக்க்ஷே: போர நிறுத்துறதா? அதான் சுத்தி வளைச்சாசுல்ல? திரபாகரன் ஒருத்தந்தான் பாக்கி... நாளைக்கே அவன் கதையும் க்ளோஸ்!

கேனன் & கோ: என்ன இது? பத்திரிக்கைக்காறங்களுக்கு பேட்டி குடுக்குற மாதிரியே எங்க கிட்டயே பொய் சொல்றீங்க? அதான் திரபாகரன் அங்க இருக்கானா இல்லையான்னே நமக்கு ஒரு மண்ணும் தெரியாது... சும்மானாலும் அதை பிடிச்சாச்சு, இதைப் பிடிச்சாச்சு, அவன் மாட்டிக்கிட்டான், இவன் மாட்டிக்கிட்டான்னு கதை விட்டுக்கிட்டிருக்கோம்...

கூஜ பக்க்ஷே: நாம சொல்றதத்தான் ஐநா சபைல இருந்து அத்தனை பேரும் நம்புறாங்கல்ல? பிறகென்ன?

கேனன் & கோ: அதுசரி, இருந்தாலும் ரெண்டு நாளுக்குள்ள ஒரு லட்சம் மக்களும் வெளியேறி வந்துட்டங்ககறத யாரும் நம்ப மாட்டாங்கலே? அப்படியே நம்பினாலும், அத்தனை பேரையும் எங்க தங்க வச்சிருக்கீங்கன்னு கேட்டா என்ன சொல்றது?

கூஜ பக்க்ஷே: (கடுப்புடன்) உன் வீட்டுல தங்க வச்சிருக்கேன்னு சொல்லு! யோவ்! நீங்க என்ன முடிவோட வந்திருக்கீங்கய்யா? என்னையே குழப்பிடுவீங்க போல!

கேனன் & கோ: அதில்லை நண்பா, ரெண்டுகட்ட தெர்தல் முடிஞ்சுடுச்சு, அடுத்து தமிழ்நாட்டுக்கும் தேர்தல் பிரச்சாரம் பண்ண “போனியா” வந்தாகணும். அவங்க வந்தாலும் 40தொகுதியில் ஜெயிக்க முடியாதுங்கறது வேற விசயம்... ஆனா கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது ஜெயிக்கணும் இல்லயா? அவங்க ஜெயிச்சுவந்தாதான வழக்கம்போல உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்? என்ன நான் சொல்றது?

கூஜ பக்க்ஷே: அதுசரி, அவங்க தமிழ்நாட்டுக்கு வர நான் என்ன பண்ணனும்? "அன்னை போனியாவே! வருக வருக!"னு போஸ்டர் அடிச்சு ஒட்டணுமா?

கேனன் & கோ: அடக்கடவுளே! அப்படி போஸ்டர் அடிக்கத்தான் ஏற்கனவே மாங்கிரசுக்குள்ளயே ஆயிரத்தெட்டு கோஷ்டி இருக்குதே! இதுல நீ வேறயா?! கொஞ்ச நாளைக்கு போரை நிறுத்தறோம்னு ஒரே ஒரு அறிக்கை மட்டும் விடு.. அது போதும் இப்போதைக்கு!

கூஜ பக்க்ஷே: என்னப்பா இது! உங்க இந்திய அரசியல்வாதிகளோட ஒரே அக்கப்போரா இருக்கு! இங்கபாரு, சொந்த நாட்டு மக்கள் மேலயே குண்டு போட்டு தினமும் ஆயிரக்கணக்குல கொன்னுக்கிட்டு இருக்கேன்... அத்தனை கட்சிக்காரங்களும் கம்முன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்காங்க... உங்க நாட்டுல என்னடான்னா, ஆளாளுக்கு அறிக்கை விடுறானுங்க! எங்களை மாதிரி அதிபர் ஆட்சிதான் உங்களுக்கும் லாயக்கு!

கேனன் & கோ: உங்க நாட்டுல அதிபர் ஆட்சி நடக்குது... எங்க நாட்டுல எங்களை மாதிரி அதிகாரிங்க ஆட்சி நடக்குது! அவ்வளவுதான் வித்தியாசம்! பிரதமரா இருந்தாலும் நான் சொல்ற யோசனயத்தான் கேட்டு நடக்கணும்!

கூஜ பக்க்ஷே: இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல, நீங்க சொல்றதுல்லாம் புரியுது. எதுக்கும் என் சகோதரர்ககிட்ட கலந்து பேசிட்டு நான் அறிக்கை விட முடியும்.

கேனன் & கோ: அப்போ சம்மதம்தான்னு எடுத்துக்கலாமா? அப்படியே போற வழியில வருணாநிதிகிட்ட சொல்லிட்டுப்போனா, அடுத்த நாள் காலைப் பேப்பருக்கு ஒரு கவிதை ரெடி பண்ணிடுவாரு! அப்படியே உங்களுக்கு "அகிம்சைப் பேரொளி" பட்டமும் குடுத்தாலும் குடுப்பாரு!

கூஜ பக்க்ஷே: அந்த பட்டத்தை அப்படியே காத்துல எங்க நாட்டுப் பக்கமா பறக்க விடுங்க புடிச்சுக்கறேன்!

(ஜோக்குக்கு சிரித்தபடி கைகுலுக்கி விடை பெறுகிறார்கள்!)

விடைபெற்றபின்...
------------------
கூஜ பக்க்ஷே: இந்த கோமாளிகள் இப்படி எதாவது சொல்லிக்கிட்டேதான் இருப்பானுங்க... இறுதித் தமிழன் இருக்கும்வரை நம்மளோட படுகொலைப் பொழுதுபோக்கை நிறுத்தவே கூடாது!

1 comment:

Anonymous said...

Fantastic.....