Monday, March 12, 2007

மெளனம்

கூச்சலான போர்க்களத்தில்
தலையை கூட்டுக்குள்ளிழுக்கும்
இயலாமையாய் நாவின்
கூர் மழுக்கிய மெளனம்...
பேசாமல் பேசி,
அசையாமல் அணைத்து,
உள்ளச்சூட்டினில்
பொறுமையை அடைகாக்கும்;
என்றாவது
கூடுகள் உடைய
அக்கினிக்குஞ்சுகள் வெளியேறும்;
அனலில்
கூச்சல்கள் அலறிப் பொசுங்கும்!

No comments: