Tuesday, August 18, 2009

உன் நினைவுகள்!

மழை ஓய்ந்த பின்னும்
மரத்தடியில் சொட்டும் இலைநீராய்
அவ்வப்போது உன் நினைவுகள்!
இரவின் அமைதி கிழித்து
கடித்துக் குதறும்
நாய்களின் இரைச்சல்
மனதினுள் ரணமாக...
தூரத்து விளக்கு வெளிச்சத்தை
துரத்தும் ஈசல்கள்;
சில
இறகுகள் முறிந்து
உயிர் வடிந்தபடி
முடமான நம் உறவாய்!
திருப்பத்தில்
நீரை வாரியிறைத்த வாகனம்
நனைந்த சட்டையை
மீண்டும் நனைத்தது...
இனியொன்றும் ஆகப்போவதில்லை
இருந்தும்
நம்பிக்கை மட்டும் துளிர்த்தபடி...
ஒவ்வொரு
மழை இரவின் விடியலிலும்!

No comments: