Monday, February 6, 2012

உன்னோடு நிமிடங்கள்...

உன்னோடு பேசிக்கொண்டிருந்த
நிமிடங்களை
சுற்றிச் சுற்றி வருகிறது
கடிகாரம்!

இப்போது கேட்கும்
இந்த விமானச்சத்தம்
அப்போது எட்டவில்லை
என் செவிகளை!

நாம் அமர்ந்த இடத்தில்
இப்போது
வேறு யாரேனும்
அமர்ந்திருப்பார்கள்...
அவர்களாவது ரசிக்கட்டும்
அங்கு மலர்ந்த பூக்களை!

இன்றும்
நானே அதிகம் பேசினேன்
அதிகமாக சிரித்தேன்
எனோ
மவுனம் சுமக்கமுடியவில்லை...
ரசிப்பது நீயெனும்போது!

ஒளிந்து விளையாடிய
சிறுவர்களில் சிலர்
நம் பின்னாலும்
மறைந்திருந்து பிடிபட்டனர்...
இன்னமும் பிடிபடவில்லை
நம்முள் மறைந்துள்ள நாம்!

No comments: