Friday, March 14, 2008

திருமண மண்டபம்

திருமண மண்டபம்
ஒருநாள் கூத்துக்கு
வேடதாரிகளாக
பார்வையாளர்களும்!

செம்பு கலந்த பொன்நகை
வம்பு கலந்த
புன்னகைப் பெண்கள்!

பிரசவ வேதனையிலும்
சிரித்தபடி
மணப்பெண்ணின் தந்தை!

அட்சதை அரிசியை எறிந்தும்
விலகாத
புகைப்படக்காரர்!

பாட்டுக்கச்சேரி முடியவும்
சீட்டுக்கச்சேரி
விடிய விடிய!

கூட்டத்தின் பொய்யும் மெய்யும்
இறுதியில் அளக்கப்படும்
மொய்யாலே!

No comments: