Sunday, October 7, 2007

கம்பளிப்புழு!

உத்திரத்தை நோக்கிய
என் சிந்தனை வலையை அறுத்தபடி
குறுக்குக் கட்டையில்
மெல்ல நகருது கம்பளிப்புழு!

கம்பளி போர்த்திய புழுவே!
குத்திட்டு நிற்கும்
மயிர்க்கால்களே உன் ஆயுதம்!
உன்னைப் பார்த்த மறுநொடி
என்னையும் மீறி
எனது ரோமங்களனைத்தும்
எழுந்து நின்று
பயமரியாதை செய்யும்!
கம்பளிப் புழுவல்ல...
நீ ஒரு கம்பீரப்புழு!

மழைக்காலத்திலே
மண்டிய புதர்ச்செடியிலே
இலைமறைகாயாக
தலைமறைவாகத் தான்
தலைமுறை தலைமுறையாக
உனது
வளர்சிதை மாற்றமெல்லாம்!
நீ பதுங்குவது
பாய்வதற்கா?
இல்லை, பறப்பதற்கு!
அஹிம்சாவாதி நீ!


மழைக்காலத்தின் அடையாளமே!
வெயில் காலத்தின்
புழுக்கமான இரவுகளில்
கனவில் நீ வந்தாலும்
என் ரோமக்கால்களனைத்தும்
சிலிர்த்து நிற்க...
நானும் உன்னைப் போலவே...
தூக்கத்தில் நெளிந்தபடி!

5 comments:

Palani-Watrap said...

//எனது முதல் கவிதைத் தொகுப்பினை வெளிவிடும் முயற்சியில் இருக்கிறேன்//

....Eppo?

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//....Eppo?//

முயற்சியில் இருக்கிறேன்!!!!

innoru mahilchiyaana visayam. Kungkumam ithalil kavithai veliyaana kavignargal anaivarukkum varum november 3rd virunthu kodukkiraar! naanum athil kalanthu kolkireen!!!

Palani-Watrap said...

Great...get his autograph in a kavithai book.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

kandippaaga! autograph with photograph!

Duct Cleaners Turlock said...

Hi, nice reading your blog