Tuesday, January 30, 2007

வருமானவரி சோதனையும், ஜெயலலிதாவும்!

அரசியல் வரலாற்றில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல், அடாவடியாக அடுத்தவர் நிலஙளை அபகரித்தல் உள்பட பல்வேறு பிரச்சனைகளால் பல்வேறு வழக்குகளை சந்தித்ததில் அகில இந்திய அளவில் பிரபலமான அரசியல்வாதி செல்வி ஜெயலலிதா அம்மையார் ஆவார்.

இது ஒருபக்கம் அவரது செல்வாக்கையும், வாக்கையும் சரித்தது என்றாலும், தனி ஒரு பெண்ணாக துணிந்து நின்று பல்வேறு வழக்குகளையும் சமாளித்து வெற்றி பெற்றவர் என்று அவரது பரிவாரங்களாலும், கூட்டணி தர்மர்களாலும் மேடைகளில் புகழப்பட்டும் வந்தது!

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விஜயகாந்த் வீட்டு வருமானவரி சோதனை பெரும்பரபரப்பை தமிழக அரசியலில் ஏற்படுத்தியது. கருணாநிதிக்கு உணர்ச்சிபொங்க விஜயகாந்த் சவால் விடுப்பதும், மத்திய அமைச்சர் அதனை மறுப்பதுமாக பத்திரிக்கைகள் "பரபரப்பை" விற்பதில் தீவிர கவனத்தில் இருந்ததன.

நிருபர்களுடன் விஜயகாந்த் பேசியபொது நகைச்சுவை என்ற பெயரில் " தி. மு. க. - அ. தி. மு. க." என்பதற்கு பதில் தி. மு. க. - தே. மு. தி. க. மாதிரி சண்டை போட கூடாது என்றார். இதன்மூலம் தி. மு. க. வுக்கு சரிசமமான எதிரி தனது கட்சிதான் என்பதை சொல்லாமல் சொன்னார்.

இதை ஜெயலலிதா படித்திருக்ககூடும். ஏற்கனவே தனது கட்சி "முன்னாள்"கள் பலரை விஜயகாந்த் கட்சிக்கு தாரை வார்த்துள்ள ஜெயலலிதாவிற்கு கடுமையான கோபம் வந்து விட்டது. இன்று தனது கொபத்தை அறிக்கையாக வெளியிட்டு மீண்டும் விஜயகாந்தை தானே வலிய முன்வந்து நார்நாராக திட்டி உள்ளார்!

விஜகாந்தை "திடீர்" அரசியல்வாதியென கிண்டல் செய்துள்ளார். தனது கட்சி பல சோதனைகளை சந்தித்த போதும் வன்முறைகளில் ஈடுபட்டதில்லையென்றும், எதிர்த்து அறிக்கைகள் விடவில்லையென்றும், போராட்டம் நடத்தாமல் சட்டத்தின் வழியிலேயே அனைத்தையும் சந்தித்ததாகவும், கொடும்பாவிகளை எரித்ததில்லை என்றும் கூறி உள்ளார்.

அவர் சொன்ன இந்த வரிகள் தான் என்னை பழைய நினைவுகளை எண்ணிப் பார்க்க தூண்டியது. அறிக்கை என்ற பெயரில் ஒட்டுமொத்த உண்மைகளை மறைக்கும் சாமர்த்தியம் ஜெயலலிதாவிற்கு நிறையவே உன்டு! அது தான் அவரது துணிவு!

ஆம். ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வந்ததும் அவர்கள் கொடும்பாவி எரிக்கவில்லை... உயிரோடு இருக்கும் மாணவிகளைத்தானே கொளுத்தினார்கள்!
கருணாநிதியை இரவோடிரவாக கைது செய்து அலைக்கழித்தது, வைகோவை உள்ளே தள்ளியது (இதனை வைகோ மறந்திருப்பார்!) எல்லாமே பழி வாங்கும் நடவடிக்கை இல்லை என்று சொல்கிறாரா?

ஜெயலலிதா அறிக்கைக்கு விஜயகாந்த் பதில் சொல்லமாட்டார் என்றே நம்புகிறேன். அப்படி பதில் சொல்ல நினைத்தால் எனது நினைவுகளை அவரும் நினைத்து கொள்வது நல்லது!

மொத்ததில் தினகரன் பத்திரிக்கைக்கு இன்று தலைப்புச் செய்தி கிடைத்தது தான் இந்த அறிக்கையினால் கலைஞருக்கு கிடைத்த லாபம்! அவரைப்போல நாமும் வேடிக்கை பார்ப்போம்! இதுவும் டென்னிசைப்போல ஒரு பணக்கார விளையாட்டு தான்!

No comments: