Monday, January 29, 2007

பாபாவும் கலைஞரும் சந்திப்பு!

கலைஞர் வீட்டில் பாபா காலில் விழுந்து வணங்கினார் தயாளு அம்மாள். அருகில் கலைஞர்! நல்லவேளை, பாபாவுக்கும் கலைஞருக்கும் கிட்டதட்ட சமவயதாக இருப்பதால் இவர்களிருவரும் ஒருவர் காலில் மற்றவர் விழவில்லை! பத்திரிக்கைகளுக்கு மிகவும் சூடான ஒரு செய்தி கிடைக்காமல் போய் விட்டது! மக்களுக்கும் வீண் குழப்பம் தீர்ந்தது!துரைமுருகனுக்கும் தயாநிதிக்கும் கேட்கக்கேட்க மோதிரம் "வரவழைத்து" கொடுத்த பாபாவுக்கு அதோடு கையிருப்பு தீர்ந்து விட்டது போலும்! கலைஞருக்கு மோதிரம், கேட்டும் கிடைக்கவில்லை! பாபாவின் சித்து வேலை பொய்த்ததால், குழப்பமான நேரங்களில் கலைஞருக்கு கை கொடுக்கும் அண்ணா பெயரை சொல்லி அண்ணா மோதிரம் கலைஞர் கையில் இருப்பதால் என் மோதிரம் கலைஞருக்கு தேவை இல்லை என சமாளித்து விட்டார் பாபா!விழா மேடைக்கு சக்கர நாற்காலியில்(!) வந்த பாபாவிடம் மீண்டும் மூன்று கோரிக்கைகள் வைத்து பண உதவி கேட்டார் கலைஞர். இதில் ஒன்றுக்காவது மேடையிலேயே பணம் "வரவழைத்து" கொடுத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!

No comments: