Thursday, August 5, 2010

வறுமை!


வேற்றுக்கிரகத்திலல்ல,

என்னுலகில் தான்
இவர்களும்!

பூமிக்கு இருதுருவமென்று படித்திருக்கிறேன்
தவறு
இரு உருவங்கள்!

உடல் இளைத்த நாகரீகமும்
மறுபுறம்
உடல் இளைக்கும் நாகரீகமும்!

உலகம் சுருங்குகிறதாம்;
உடற்சுருக்கங்கள் சிரிக்கின்றன
எனைப் பார்த்து!

வறுமை தான்
தின்று கொண்டிருக்கிறது...
தினம் இவர்களை!

இனி
சிதறும் உணவுப் பருக்கைகளில்
இவர்கள் முகம் தெரியட்டும்!

படமெடுத்தவர்களைப் பார்த்தால்
கேட்க வேண்டும்
உணவளித்தீர்களா என்று!

No comments: