Friday, July 11, 2008

ஊடல்!

கோபம் உன்னோடுதான்
என்னோடுகூட பேச மனமில்லாமல்
நான்!

உன்னோடு பேச்சடக்குவது
கடினமாயிருக்கிறது
நீருக்குள் மூச்சடக்குவதை விட!

நீ இருந்ததை உணரவில்லை
இப்போது உணர்கிறேன்
வெறுமையை!

மௌனப்பார்வை போதும்
என்
மௌனத்தை நொறுக்க!

No comments: