Monday, June 16, 2008

தொலைக்காத என் கவிதை!

தொலைக்காத கவிதையைத் தேடி
தெருவில் நடந்து சென்றேன்...

எண்ணை விடாத மிதிவண்டி
முனங்கியபடி
கடந்து சென்றது என்னை!

தெருவோரக் குப்பையில்
பால்கவர் பொறுக்கிய பெண்ணை
'தீண்டாமல்' திட்டின தெருநாய்கள்!

அறுந்து கிடந்த செருப்பில்
பலமுறை குத்தியிருக்கிறது...
தையல் ஊசி!
சற்று தூரத்தில்
'உடன் குப்பை' ஏறிய
மற்றொரு செருப்பு!

பாதியிலேயே வீடு திரும்பினேன்
குப்பையில் கிடைத்த
தொலைக்காத என் கவிதையோடு!

2 comments:

NSK said...

thanni thottiyil kavidhai thaedum kavingargal mathiyil....kuppai thottiyil thaedum kavignara neer?

NSK said...
This comment has been removed by the author.