Showing posts with label பட்டுச்சேலை. Show all posts
Showing posts with label பட்டுச்சேலை. Show all posts

Thursday, January 19, 2012

பட்டுச்சேலை

தன்னை நெய்த பொழுதினும்
பெரிதுவக்கின்றன
உன் வீட்டு பீரோவிலிருக்கும்
சேலைகள்!
எச்சிலை இழையாக்கி
சுற்றிக்கொண்டு உயிர்நீத்த
பட்டுப் புழுக்கள்
மோட்சம் பெற்றன
அந்த சேலைகளை
நீ சுற்றிக்கொண்ட நொடிகளில்!