Thursday, March 26, 2009

தேர்தல் வந்திடுச்சு! - மூன்றாம் பாகம்!

கொத்துக் குண்டுகளால்
செத்து மடியுது
தமிழினம்...
முதுமையைச்
சொறிந்துவிட்டு
அறிக்கைமேல் அறிக்கையாய்
அனுதாபம் தேடுது
சாணக்கியத்தனம்!
---------------------------

அரசியலில்
தலையெடுப்பதற்காக
தலையெடுப்பதாக
மூன்றாந்தர அரசியலில்
நேருவின்
மூன்றாவது தலைமுறை!
எதையெதையோ இடிப்பவர்கள்
இடித்துக் கூறாமல்
குழப்பத்துடன்!
---------------------------

தமிழுணர்வாளர்கள்,
தேர்தலுக்காக
மரத்துக்கு மரம்
தாவியபடி...
சற்று
பொறுமை காக்கட்டும்
முத்துக்குமரன்கள் ஆவி!
---------------------------

காந்தி கடிகாரமும்
மூக்குக் கண்ணாடியும்
பேசிக்கொண்டன...
ஏலத்திலெடுக்கப்பட்ட
டோனிக்கும்கூட
இந்தியாவில்
பாதுகாப்பில்லையாமே!
---------------------------

சென்றமுறை
வெளிநாட்டு வீரர்களை
விலைக்குவாங்கிய ஐ.பி.எல்,
அடுத்தமுறை
தென்னாப்பிரிக்காவை
விலைக்கு வாங்கும்
அதே கிரிக்கெட்டுக்காக!

No comments: