Thursday, January 19, 2012

சத்தம்!

மனிதர்களின் பேச்சுக்குரல்கள்
வாகனங்களின் பேரிரைச்சல்
ஒலிபெருக்கியின் திரையிசைப்பாடல்
செல்பேசியின் அழைப்புகள்
குழந்தையின் அழுகை
மரக்கிளைப் பறவைகளின் கூக்குரல்
காற்றிலசையும் சருகுகள் ஓசை
ஆழ்நிலை குறட்டையொலி
அத்தனை சத்தங்களும் களைந்த
நிர்வாண உலகத்திற்கான தேடல்
மூச்சுச் சத்தம்
மவுனிக்கும்வரை கிட்டாமல் போக,
ஒப்பாரிச் சத்தத்திற்கிடையே
தூக்கிச் செல்லப்பட்ட உடலுக்கு
இறுதியாய்க் கேட்டது
'சட சட'வென ஏதோவொன்று
பற்றியெரியும் ஓசை!

1 comment:

Rathnavel Natarajan said...

மனதை நெகிழ வைக்கும் கவிதை.