Thursday, January 19, 2012

ஒற்றைக் கொம்புக் குதிரை!

அந்த அபூர்வமான
ஒற்றைக் கொம்புக் குதிரை
பல வருட இடைவெளிக்குப்பின்
என் கனவிலே வந்தது
என் பால்யத்தின்
படக்கதை நாயகனாக
ஆச்சர்யங்கள் பல செய்து
பறந்து திரிந்த
அதன் சிறகுகள் அடங்க
மெல்ல நடைபோட்டு அருகில் வர
வாஞ்சையுடன் தடவினேன்
என் முகத்தை தன் முகத்தால் உரசி
தன் அன்பை வெளிப்படுத்தியது
சற்று நேரத்திற்கெல்லாம்
இன்னமும் விலகாத
அதன் ஒற்றைக் கொம்பு ரகசியத்தை
என்னிடம் சொல்லாமலேயே
விர்ரென்று கிளம்பி
விண்ணில் பாய்ந்து மறைந்தது...
அங்கே படர்ந்திருந்த
வண்ண ஒளிக்கலவை மெல்ல கலைந்து
இருள் மீண்டும் கவ்வ
தொலைந்தது என் பால்யம் தூக்கத்தினுள்!

No comments: