Thursday, January 19, 2012

பட்டுச்சேலை

தன்னை நெய்த பொழுதினும்
பெரிதுவக்கின்றன
உன் வீட்டு பீரோவிலிருக்கும்
சேலைகள்!
எச்சிலை இழையாக்கி
சுற்றிக்கொண்டு உயிர்நீத்த
பட்டுப் புழுக்கள்
மோட்சம் பெற்றன
அந்த சேலைகளை
நீ சுற்றிக்கொண்ட நொடிகளில்!

No comments: