Thursday, June 14, 2007

ராமர் பாலமும் அனுமார் கூட்டமும்!

கல்லைக் கடவுளென்று
காட்சியாக்கி
காசு பார்க்கும் கூட்டம்
கடல்
கொட்டிக் குவித்த
மணல் திட்டுகளைப்
பாலமென்று சொல்லுது...
சீதையை மீட்கச் சென்ற
பாதையென்றும் சொல்லுது!

இன்று
ராவணனும் இல்லை...
சீதையும் இல்லை...
அட,
ராமனும் கூட
கோர்ட்டுக்கு வரவில்லை...
சாட்சி சொல்ல!
யாரிடம் விசாரிக்க?
கேட்குது நீதிமன்றம்...
பதிலைக் காணோம்!

ஈழத்தமிழரை
மீட்க வழியில்லை...
இல்லாத சீதையை மீட்க
சொல்லுது புதுக்கதை!
நல்லவேளை...
இந்த நாசவலையில்
வீழவில்லை நாசா!

ராமனே
கட்டினால் தான் என்ன?
வெட்டியாய் இருப்பதை
வெட்டினால்தான் என்ன?
ராமாயண கதையில்
சுயநலமாக எழுந்ததை
மகாபாரதத்தின்
பொதுநலனுக்காக
குடைவது தவறா?

சீதையை காப்பாற்றிய
ராமன்...
இன்று மீண்டும்
யுத்தகளத்தில்...
ராஜபக்சேவை காப்பாற்ற!

அண்டைநாட்டுக்கு,
நம் வளர்ச்சியில்
பயம் கொண்ட
அயல்நாட்டுக்கெல்லாம்
ஆகாத திட்டம்...
இவர்களுக்கும்
ஆகாமல் போனதில்
வியப்பில்லை!
செவிகிழியக் கேட்குது
இவர்களின்
கோஷமும் வேஷமும்...
பாரத் மாதாகீ ஜே!